Skip to main content

பி.இ. விண்ணப்பம்; சான்றிதழ்களை தனியாக அனுப்பலாம்: அண்ணா பல்கலை. அறிவிப்பு


பொறியியல் சேர்க்கை விண்ணப்பத்துடன் இணைக்கப்பட வேண்டிய சான்றிதழ்கள் கிடைக்கப் பெறாதவர்கள், அவற்றை தனியாகவும் அனுப்பலாம் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

பல்வேறு தரப்பினரிடமிருந்து எழுந்த கோரிக்கையைத் தொடர்ந்
து இந்தச் சலுகையை பல்கலைக்கழகம் அளித்துள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை செயலர் ரைமண்ட் உத்தரியராஜ் கூறியது:

பொறியியல் சேர்க்கைக்கான விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்க வெள்ளிக்கிழமை (மே 29) கடைசியாகும். இந்த நிலையில், பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழ் பதிவிறக்கம் செய்வதிலும், இருப்பிடச் சான்றிதழ், முதல் தலைமுறை மாணவர் சான்றிதழ் பெறுவதிலும் தாமதம் ஏற்படுவதால் பி.இ. விண்ணப்பம் சமர்ப்பிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக புகார்கள் தெரிவிக்கப்படுகின்றன. 


இந்தச் சான்றிதழ்கள் கிடைக்கப் பெறாத விண்ணப்பதாரர்கள், நிறைவு செய்த விண்ணப்பத்தை மட்டும் வெள்ளிக்கிழமைக்குள் சமர்ப்பித்தால் போதுமானது.

பின்னர், இணைக்கப்பட வேண்டிய சான்றிதழ்கள் கிடைக்கப்பெற்ற உடன், சமவாய்ப்பு எண் (ரேண்டம் எண்) வெளியிடுவதற்கு (15-06-2015) முன்னதாக தபால் மூலம் அனுப்ப வேண்டியது அவசியமாகும்.

அவ்வாறு அனுப்பும்போது, கடிதத்தில் பொறியியல் சேர்க்கை விண்ணப்ப எண்ணைக் குறிப்பிட்டு, சான்றிதழ்களை இணைத்து "செயலர், தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை, அண்ணா பல்கலைக்கழகம், சென்னை - 600 025' என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும் என்றார்.

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு