Skip to main content

ஆங்கிலவழி பள்ளிகளை அதிகரிக்க வேண்டும் என்ற உத்தரவால் சிக்கல்

ஆங்கிலவழி பள்ளிகளை அதிகரிக்க வேண்டும் என்ற உத்தரவால் சிக்கல்: தொடக்க கல்வி இயக்குனரின் நடவடிக்கையால் ஆசிரியர்கள் தவிப்பு
அரசு பள்ளிகளில், ஏற்கனவே துவக்கப்பட்ட ஆங்கிலவழிக் கல்வி, தட்டு தடுமாறிதவிக்கிறது. வரும் கல்வியாண்டில், ஆங்கிலவழி
க் கல்வி வழங்கும் தொடக்க மற்றும்நடுநிலைப் பள்ளிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என, தொடக்கக் கல்வி இயக்குனரின் உத்தரவு, ஆசிரியர்களை தவிப்புக்கு உள்ளாக்கியுள்ளது.
தமிழகத்தில், அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில், மாணவர்களின் எண்ணிக்கை, ஆண்டுக்காண்டு சரிந்து கொண்டே வருகிறது. ஆங்கிலவழிக் கல்வி நடத்தும், பிரைமரி, நர்சரிகளுக்கு செல்லும் குழந்தைகளை கவரும் வகையில், அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில், ஆங்கிலவழிக் கல்வி துவக்கிக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டது. இதற்கான ஆசிரியர்கள் நியமிக்கப்படுவர் எனவும் அறிவிக்கப்பட்டது.இரு ஆண்டுகளாக, தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில், பலவற்றில் ஆங்கிலவழிக் கல்வியில் மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது. ஆனாலும், அதற்கென தனியாக ஆசிரியர்களோ, பிரத்யேக, ஏ.பி.எல்., அட்டைகளோ வழங்கப்படவில்லை.விரக்தி:இதனால், ஆங்கிலவழிக் கல்வி மாணவர்களையும், தமிழ் வழி மாணவர்களையும், ஒரே வகுப்பறையில் அமர்த்தி, தமிழிலேயே பாடம் நடத்தும் நிலையே, அரசு தொடக்கப் பள்ளிகளில்காணப்படுகிறது. துவக்கத்தில், ஆங்கிலவழிக் கல்வி என, ஆர்வத்துடன் சேர்த்த பெற்றோரும், குழந்தைகள் ஆங்கிலத்தில் எந்த முன்னேற்றமும் இல்லாதது கண்டு, விரக்திக்கு உள்ளாகினர்.இந்நிலையில், கல்வியாண்டு துவக்கும் போது, பள்ளிகள் கடைபிடிக்க வேண்டிய நடைமுறை குறித்து, தொடக்கக்கல்வி இயக்குனர் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், 'ஆங்கிலவழிக் கல்வி பள்ளிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, கூறியுள்ளார்.புதிதாக பள்ளிகளில் ஆங்கிலவழிக் கல்வியை துவக்க இயக்குனர் வெளியிட்டுள்ள உத்தரவு, ஆசிரியர்கள் இடையே அதிருப்தியை ஏற்படுத்திஉள்ளது.
இதுகுறித்து ஆசிரியர்கள் கூறியதாவது:
ஆங்கிலவழிக் கல்வி துவக்கப்பட்டு, மாணவர் சேர்க்கைநடத்தினால், தமிழ்வழிக் கல்வியில் மாணவர் எண்ணிக்கை சரிந்து விடுகிறது. எப்படியிருப்பினும், அப்பள்ளியில் உள்ள ஆசிரியர்களே, உபரியாக உள்ளனர். அவர்கள்வழக்கம் போல, பாடம் நடத்துவதால், ஆங்கிலவழிக் கல்வியில் படிக்கும் மாணவர்களிடம் எவ்வித முன்னேற்றமும் இருப்பதில்லை. இதனால், அரசு பள்ளியில், ஆங்கிலவழிக் கல்வி என்பதன் மீதான நம்பிக்கை மக்களிடம் குறைந்து வருகிறது.
மாற்றம்:
இதை போக்க, ஆங்கிலவழிக் கல்விக்கென தனி ஆசிரியர்கள், தனி சீருடை, பிரத்யேக ஏ.பி.எல்., அட்டை என, பள்ளியின் சூழலையும், மாணவர்களையும் மாற்றினால் மட்டுமே, ஆங்கிலவழிக் கல்வி மக்களிடையே எடுபடும். ஆனால், இதை எதுவும் செய்யாமல், பள்ளிகளில் ஆங்கிலவழிக் கல்வியை துவக்க உத்தரவிட்டால், பெயரளவில் மட்டுமே அவை நடத்தப்படும். இதனால், அரசு பள்ளிகளில், மாணவர் எண்ணிக்கை சரிவை தடுத்து நிறுத்துவது இயலாத காரியம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு