Skip to main content

ஓய்வூதியதாரர்களுக்கான விதிகள் தளர்வு


ஓய்வூதியதாரர்கள் கருவூலத்தில் சமர்ப்பிக்க வேண்டிய சான்றிதழில், சுய சான்றொப்பம் அளித்தால் போதும்' என, அரசு அறிவித்துள்ளது.

தமிழக அரசிடம், ஓய்வூதியம் பெறுவோர், குடும்ப ஓய்வூதியம் பெறுவோர், 'வேலையில் இல்லை, மறு வேலைவாய்ப்பு கிடை
த்துள்ளது, மறுமணம் செய்யவில்லை, திருமணமாகவில்லை' என்பது போன்ற விவரங்களை, முறையான விண்ணப்பத்தில் தெரிவிக்க வேண்டும். 'விண்ணப்பத்தில், அதிகாரிகளிடம் சான்றொப்பம் பெற வேண்டும்' என, கடந்த மார்ச் மாதம் உத்தரவிட்டது. இந்நிலையில், ஓய்வூதியம் பெறுவோர், அதிகாரிகளிடம் சான்றொப்பம் பெற சிரமப்படுவதால், விண்ணப்பத்தை எளிமைப்படுத்தும்படி,
கருவூலம் மற்றும் கணக்கு துறை இயக்குனர், அரசுக்கு கடிதம் எழுதினார். அதை ஏற்ற அரசு, 'ஓய்வூதியர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியர்கள், அதிகாரிகளிடம் சான்றொப்பம் பெறாமல், சுய சான்றொப்பம் அளித்தால் போதும்' என அறிவித்துள்ளது. இவ்விவரத்தை, அனைத்து ஓய்வூதியம் வழங்கும் அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தும்படி, கருவூலம் மற்றும் கணக்கு துறை இயக்குனருக்கு, நிதி துறை செயலர் சண்முகம் உத்தரவிட்டு உள்ளார்.

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு