Skip to main content

காலமுறை ஊதியம் வழங்குவது குறித்த விபரம் - வழக்கு சார் தகவலே!

2003 -06 தொகுப்பூதிய காலத்திற்கு காலமுறை ஊதியம் வழங்குவது குறித்த விபரம் - வழக்கு சார் தகவலே!
            (ந.க.எண்.016410/டி1/இ4/2015) உதவிபெறும் பள்ளிகளில் 2003-06 ஆண்டுகளில் தொகுப்பூதியத்தில் நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்களின் விபரம் மற்றும் அக்காலத்திற்கு காலமுறை ஊதியம் வழங்கப் பட்டால் ஆகும் செலவீனம் பற்றியும் கணக்கீடு செய்து
அனுப்புமாறு மாவட்டக்கல்வி அலுவலர்கள் பணிக்கப்பட்டிருந்தனர் -(2003-06 தொகுப்பூதிய காலத்திற்கு காலமுறை ஊதியம் வழங்கக் கோரி உயர்நீதி மன்றத்தில் தாக்கல் செய்யப் பட்டுள்ள வழக்கு ஒன்றிற்கு எதிர்மனு தாக்கல் செய்ய சேகரிக்கப்படும் விபரங்களே இவை)
        சிலநாட்களுக்கு முன்பாக பள்ளிக்கல்வித்துறையின் சார்பாக (ந.க.எண்.016410/டி1/இ4/2015) உதவிபெறும் பள்ளிகளில் 2003-06 ஆண்டுகளில் தொகுப்பூதியத்தில் நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்களின் விபரம் மற்றும் அக்காலத்திற்கு காலமுறை ஊதியம் வழங்கப் பட்டால் ஆகும் செலவீனம் பற்றியும் கணக்கீடு செய்து அனுப்புமாறு மாவட்டக்கல்வி அலுவலர்கள் பணிக்கப்பட்டிருந்தனர். ஆனால் இவ்வாறு ஒரு உத்தரவு தொடக்க கல்வி துறையில் வெளியிடப் படவில்லை.

           ஆனால் பளளிக் கல்வித்துறையால் இந்த உத்தரவு வெளியிடப்பட்ட உடன் தமிழகமெங்கும் உள்ள தொகுப்பூதிய ஆசிரியர்கள் தங்கள் மகிழ்ச்சியை முகநூலிலும் வாட்ஸ்ஆப்பிலும் வெளிப்படுத்திக் கொண்டாடினர்.... ஏதோ அரசாணையே வெளியிடப்பட்டு விட்டது போலவும் நிலுவைத்தொகை நாளையே கையில் வழங்கப்படப் போவது போலவும் இருந்தது இந்தக் கூச்சல்..இதில் கொடுமை என்னவென்றால் ஒரு அரசுப்பள்ளி ஆசிரியர் "உதவிபெறும் பள்ளிக்கு மட்டும்தான் காலமுறை ஊதியமா! எங்களுக்கு இல்லையா? என ஆதங்கப்படுகிறார்.. 

போராட்டம் என்னவென்றால் என்ன?
போராடாமல் ஏதாவது கிடைக்குமா? என அறியாத இவர்கள்தான் பேரணி, உண்ணாவிரதம் முடிந்த மறுநாள் காலையிலே தர ஊதியம் மாறிவிட்டதா? என விளம்பியவர்கள்.

சரி அரசு உத்தரவு பற்றிய உண்மைக்கு வருவோம்.
2003-06 தொகுப்பூதிய காலத்திற்கு காலமுறை ஊதியம் வழங்கக் கோரி உயர்நீதி மன்றத்தில் தாக்கல் செய்யப் பட்டுள்ள வழக்கு ஒன்றிற்கு எதிர்மனு தாக்கல் செய்ய சேகரிக்கப்படும் விபரங்களே இவை. அரசுப்பள்ளிகளுக்கு அலுவலகங்களே தயார் செய்துவிடும். உதவிபெறும் பள்ளிகளுக்கு நிர்வாகிகள் மூலம் பெறப்பட்டு ஆவணப் படுத்தப் படுகின்றன.

       வழக்கில் பள்ளிக்கல்வி இயக்குநரே பிரதிவாதியாக சேர்க்கப் பட்டுள்ளதால் பள்ளிக்கல்வித்துறை மட்டுமே இப்பணியில் ஈடுபட்டுள்ளது.தொடக்கக் கல்வித்துறையில் இப்பணி சார்பான எந்த ஒரு அசைவும் இல்லை. இவற்றை அறியாத ஆர்வக்கோளாறுகள் ஆரவாரம் செய்வது மட்டுமல்லாமல் இப்பணத்தை எப்படி செலவு செய்வது என இப்போதே மனக்கணக்கு போடவும் ஆரம்பித்து விட்டார்கள். இவர்களின் இதுபோன்ற செயல்பாடுகள் போராட்டக்களத்தை நீர்த்துப் போகச் செய்யும்.

      ஏற்கனவே இளைஞர்கள், பெண்களின் துடிப்பான பங்கேற்பு இல்லாமல் "ஜாக்டோ" போராட்டங்கள் எழுச்சியற்ற நிலையில் உள்ளது. அடுத்தகட்டம் ஆறிப்போய் கிடக்கிறது. இந்நிலையில் இதுபோன்ற போலி சந்தோசங்களை புறந்தள்ளி முந்தைய போராட்டகால வரலாறுகளை நினைவில் கொண்டு ஒற்றுமையாய் களம் கண்டு கோரிக்கை வெல்வோம். நாமாகவே தப்புக்கணக்கு போட்டு அதுகிடைக்கும் இது கிடைத்துவிடும் என திருப்தி பட்டுக்கொள்வதை பார்த்து ஆசிரியர்கள் இவ்வளவு ஏமாளிகளா என அரசும் அதிகாரிகளும் ஆச்சரியம் அடைகிறார்கள். ஆசிரியர் சங்கப் பொறுப்பாளர்கள் ஆசிரியர்களின் இதுபோன்ற செயல்களை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு