Skip to main content

ஓய்வூதியம் தொடர்பான வழக்கு: தமிழக அரசுக்கு உத்தரவு


        தற்காலிக பணிக்காலத்தில், 50 சதவீதத்தை, ஓய்வூதியத்தில் சேர்க்க கோரிய, ஓய்வு பெற்ற வனத்துறை ஊழியரின் மனுவை பரிசீலிக்க, அரசுக்கு, சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.

          தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே, அடைக்கம்பட்டியைச் சேர்ந்த முத்துப்பாண்டியன் தாக்கல் செய்த மனு: வனத்துறை சமூக
க் காடுகள் கோட்டத்தில், கடந்த, 1983 முதல், 2009ம் ஆண்டு வரை, தோட்ட காவலராக, தினக்கூலியாக பணிபுரிந்தேன். கடந்த, 2009, ஆக., 7ம் தேதி, பணி நிரந்தரம் செய்யப்பட்டு, 2011, ஏப்., 30ல் ஓய்வு பெற்றேன். பணி நிரந்தர காலத்தை மட்டும் கணக்கிட்டு, ஓய்வூதியம் வழங்குகின்றனர். தற்காலிக பணி காலத்தை கணக்கில் கொள்ளவில்லை. தற்காலிக பணிக்காலத்தில், 50 சதவீதத்தை, ஓய்வூதிய பலன்களில் சேர்த்து கணக்கிட்டு வழங்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு, மனுவில் குறிப்பிட்டார்.

நீதிபதி எஸ்.வைத்தியநாதன் பிறப்பித்த உத்தரவு: மனுதாரரின் கோரிக்கையை பொறுத்தவரை, தகுதி அடிப்படையில், எவ்வித கருத்தையும், இந்நீதிமன்றம் தெரிவிக்க விரும்பவில்லை. விதிகள்படி, மனுதாரருக்கு தகுதியுள்ளதா என்பதை பரிசீலித்து, வனம் மற்றும் சுற்றுச்சூழல்துறை முதன்மைச் செயலர், முதன்மை தலைமை வனப்பாதுகாவலர், மதுரை சமூக காடுகள் கோட்ட வன அலுவலர் ஆகியோர், தகுந்த உத்தரவை பிறப்பிக்க வேண்டும். இவ்வாறு, நீதிபதி உத்தரவிட்டார்.

Popular posts from this blog

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

கணக்கெடுப்பு ! : பள்ளி செல்லா மாணவர்கள்...: ஏப்., 7ம் தேதி முதல் துவக்கம்

கடலூர் மாவட்டத்தில், அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு இடைநின்ற மாணவ, மாணவிகள் குறித்த விவரங்கள் கணக்கெடுக்கும் பணி வரும் 7ம் தேதி, துவங்குகிறது. தமிழகத்தில், ஆண்டுதோறும் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், 6 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு

10ம் வகுப்பு கணிதத்தேர்வில் போனஸ் மதிப்பெண்

பத்தாம் வகுப்பு தேர்விற்கான விடைத்தாள்கள் திருத்தும் பணி நடக்கிறது. பத்தாம் வகுப்பு கணிதத்தேர்வில், 'ஏ' பிரிவு ஒரு மதிப்பெண் வினாவிற்கான 15 வது கேள்வியில் ஆங்கில வழி வினா தவறாக கேட்கப்பட்டுள்ளதா