Skip to main content

ஓய்வூதியம் தொடர்பான வழக்கு: தமிழக அரசுக்கு உத்தரவு


        தற்காலிக பணிக்காலத்தில், 50 சதவீதத்தை, ஓய்வூதியத்தில் சேர்க்க கோரிய, ஓய்வு பெற்ற வனத்துறை ஊழியரின் மனுவை பரிசீலிக்க, அரசுக்கு, சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.

          தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே, அடைக்கம்பட்டியைச் சேர்ந்த முத்துப்பாண்டியன் தாக்கல் செய்த மனு: வனத்துறை சமூக
க் காடுகள் கோட்டத்தில், கடந்த, 1983 முதல், 2009ம் ஆண்டு வரை, தோட்ட காவலராக, தினக்கூலியாக பணிபுரிந்தேன். கடந்த, 2009, ஆக., 7ம் தேதி, பணி நிரந்தரம் செய்யப்பட்டு, 2011, ஏப்., 30ல் ஓய்வு பெற்றேன். பணி நிரந்தர காலத்தை மட்டும் கணக்கிட்டு, ஓய்வூதியம் வழங்குகின்றனர். தற்காலிக பணி காலத்தை கணக்கில் கொள்ளவில்லை. தற்காலிக பணிக்காலத்தில், 50 சதவீதத்தை, ஓய்வூதிய பலன்களில் சேர்த்து கணக்கிட்டு வழங்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு, மனுவில் குறிப்பிட்டார்.

நீதிபதி எஸ்.வைத்தியநாதன் பிறப்பித்த உத்தரவு: மனுதாரரின் கோரிக்கையை பொறுத்தவரை, தகுதி அடிப்படையில், எவ்வித கருத்தையும், இந்நீதிமன்றம் தெரிவிக்க விரும்பவில்லை. விதிகள்படி, மனுதாரருக்கு தகுதியுள்ளதா என்பதை பரிசீலித்து, வனம் மற்றும் சுற்றுச்சூழல்துறை முதன்மைச் செயலர், முதன்மை தலைமை வனப்பாதுகாவலர், மதுரை சமூக காடுகள் கோட்ட வன அலுவலர் ஆகியோர், தகுந்த உத்தரவை பிறப்பிக்க வேண்டும். இவ்வாறு, நீதிபதி உத்தரவிட்டார்.

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு