Skip to main content

குழந்தைகளுக்கான உதவி மையம் தொடக்கம்


         குழந்தைகளின் பாதுகாப்புக்காக மத்திய அரசின் பெண்கள், குழந்தைகள் நல அமைச்சகத்தின் நிதியுதவியுடன் செயல்படுத்தப்படும் "சைல்டு லைன்' இலவச தொலைபேசி (1098) சேவை மையம் தொ
டக்க விழா சென்னை ஒக்கியம், துரைப்பாக்கத்தில் உள்ள எழில் நகரில் புதன்கிழமை நடைபெற்றது.

         மாநில குழந்தைகள் பாதுகாப்பு ஆணையத்தின் தலைவர் சரஸ்வதி ரங்கசாமி புதிய சேவை மையத்தைத் தொடக்கி வைத்தார்.  இதுகுறித்து இந்தத் திட்டத்தைச்  செயல்படுத்தும் "செஸ்' தன்னார்வ அமைப்பின் தலைவர் டாக்டர் பி.மனோரமா கூறியதாவது:

 குழந்தைகளுக்கு ஏற்படக் கூடிய பாலியல் துன்புறுத்தல்கள், ஆதரவற்ற குழந்தைகள், குழந்தைத் தொழிலாளர்கள், பிச்சையெடுக்கும் தொழிலில் ஈடுபடுத்தப்படும் குழந்தைகள் உள்பட குழந்தைகளுக்கு ஏற்படக் கூடிய பிரச்னைகள் குறித்து 1098 என்ற இலவச தொலைபேசி எண்ணில் தகவல் தெரிவிக்கலாம்.  அதன்பேரில், தொடர்புடைய குழந்தைகளைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

 இதில் சைல்டு லைன் ஃபவுண்டேஷன் அமைப்பின் நிர்வாகி அருண்மொழி, தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தின் செயற்பொறியாளர் செல்வமணி, செஸ் தன்னார்வ அமைப்பின் திட்ட மேலாளர் வளவன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். 

Popular posts from this blog

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

கணக்கெடுப்பு ! : பள்ளி செல்லா மாணவர்கள்...: ஏப்., 7ம் தேதி முதல் துவக்கம்

கடலூர் மாவட்டத்தில், அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு இடைநின்ற மாணவ, மாணவிகள் குறித்த விவரங்கள் கணக்கெடுக்கும் பணி வரும் 7ம் தேதி, துவங்குகிறது. தமிழகத்தில், ஆண்டுதோறும் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், 6 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு

10ம் வகுப்பு கணிதத்தேர்வில் போனஸ் மதிப்பெண்

பத்தாம் வகுப்பு தேர்விற்கான விடைத்தாள்கள் திருத்தும் பணி நடக்கிறது. பத்தாம் வகுப்பு கணிதத்தேர்வில், 'ஏ' பிரிவு ஒரு மதிப்பெண் வினாவிற்கான 15 வது கேள்வியில் ஆங்கில வழி வினா தவறாக கேட்கப்பட்டுள்ளதா