Skip to main content

எஸ்.ஐ. எழுத்துத் தேர்வின் முக்கிய விடைகள் வெளியீடு:தவறு இருந்தால் முறையிடலாம்


தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் நடத்திய காவல் உதவி ஆய்வாளர் எழுத்துத் தேர்வின் முக்கிய விடைகளை அந்த வாரியம் வியாழக்கிழமை வெளியிட்டது.

வினா - முக்கிய விடைகளில் ஏதேனும் தவறு இருந்தால் மு
றையிடலாம் எனவும் அந்த தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் காவல்துறையில் உள்ள 1078 உதவி ஆய்வாளர்கள் காலிப் பணியிடங்களுக்கான தேர்வை சில மாதங்களுக்கு முன்பு அறிவித்தது. இதில் 20 சதவீதம் பணியிடங்களில் அத்துறையைச் சேர்ந்தவர்களையே தேர்வு மூலம் தேர்வு செய்ய உள்ளதாகவும் அந்த தேர்வு வாரியம் கூறியது.


இந்தத் தேர்வில் பங்கேற்க 1.65 லட்சம் பேர் விண்ணப்பித்தனர். இந்தத் தேர்வின் முதல் கட்டமாக எழுத்துத் தேர்வும், பின்னர் உடல் தகுதித் தேர்வும், நேர்முகத் தேர்வும் நடத்த முடிவு செய்யப்பட்டது.

இதில் பொது ஒதுக்கீட்டுதாரர்களுக்கு எழுத்து தேர்வு கடந்த 23-ஆம் தேதி மாநிலம் முழுவதும் 114 தேர்வு மையங்களில் நடைபெற்றது. சென்னையில் 22 தேர்வு மையங்களில் இளைஞர்கள் தேர்வு எழுதினர். இந்தத் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களில், சுமார் 80 சதவீதம் பேர் எழுதியதாக அந்தத் தேர்வு வாரியம் கூறியது. இதேபோல காவல்துறை ஒதுக்கீட்டுதாரர்களுக்கு எழுத்துத் தேர்வு கடந்த 24-ஆம் தேதி நடைபெற்றது.

 முக்கிய விடைகள் வெளியீடு: இந்நிலையில் இரு தேர்வுகளுக்குரிய முக்கிய விடைகளை அந்த வாரியம், தனது இணையதளத்தில் வியாழக்கிழமை வெளியிட்டது. முக்கிய விடைகளை, தேர்வர்கள் பதிவிறக்கம் செய்து பார்க்கலாம்.

தேர்வில் கேட்கப்பட்ட வினா, முக்கிய விடைகளில் ஏதேனும் தவறு அல்லது மாறுபாடு இருப்பின் தேர்வர்கள் முறையீடு செய்யலாம் என தேர்வு வாரியம் கூறியுள்ளது. முறையீட்டினை தகுந்த ஆதாரங்களுடன் எழுத்து மூலமாக சமர்ப்பிக்க வேண்டும் எனவும், தகுந்த ஆதாரங்கள் இல்லாத முறையீடு ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது எனவும், வினா - முக்கிய விடைகள் தொடர்பான முறையீட்டினை தேர்வு வாரிய அலுவலகத்துக்கு தபால் மூலமாகவோ usrb91@gm​ail.com என்ற மின்னஞ்சலுக்கோ ஜூன் 5-ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும் எனவும் சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் கேட்டுக் கொண்டுள்ளது.

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு