Skip to main content

எஸ்.ஐ., தேர்வில் முறைகேடு: டி.ஐ.ஜி., விசாரிக்க கோரிக்கை


நாமக்கல் மாவட்டத்தில் நடந்த, போலீஸ் எஸ்.ஐ., தேர்வில், இருவருக்கு மட்டும், தனி அறையை கொடுத்து, தேர்வெழுத வைத்த விவகாரம், சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.இதுகுறித்து, டி.ஐ.ஜி., விசாரணை நடத்த வேண்டும் என, தேர்வர்கள், கோரிக்கை விடுத்து உள்
ளனர்.காவல் துறையில், காலியாக உள்ள, 1,078 எஸ்.ஐ., பணியிடங்களை நிரப்ப, கடந்த,23, 24 தேதிகளில், எழுத்துத் தேர்வு நடந்தது
.80 சதவீதம் பேர்...:மாநிலம் முழுவதும், ஐ.ஜி., கமிஷனர், டி.ஐ.ஜி., - எஸ்.பி., ஆகியோரின் மேற்பார்வையில், 114 மையங்களில் தேர்வு நடந்தது. இதில், 80 சதவீதம் பேர் பங்கேற்றனர். பொதுப்பிரிவினருக்கு, ஒரு கட்டமாகவும், போலீசில் பணியாற்றுவோர், அமைச்சுப் பணியாளரின் வாரிசுதாரர்களுக்கு (94 பணியிடங்கள்)மறு கட்டமாக வும் தேர்வு நடந்தது. நாமக்கல் மாவட்டத்தில், திருச்செங்கோடு, விவேகானந்தா கல்லூரி மையத்தில், தேர்வு நடந்தது. இதில், 2,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
இருவருக்கு 'கவனிப்பு?
'இதில், நாமக்கல் மாவட்ட எஸ்.பி.,யிடம் இன்ஸ்பெக்டராக பணியாற்றுபவரின் டிரைவர்வாசுதேவன் (தேர்வு எண்: 6150001), மற்றொரு போலீஸ் சத்தியமூர்த்தி (6150002) ஆகியோர், தனி அறையில் அமர்ந்து தேர்வு எழுதியதாக புகார் எழுந்துள்ளது. தேர்வில் வெற்றி பெற, உயர் அதிகாரி கள் சிலரை, அவர்கள், 'பலமாக'கவனித்துள்ள தாகவும், 170 மதிப்பெண்ணில், அவர்கள், 160 மதிப்பெண் வரை பெற வாய்ப்புள்ளது என, தகவல் வெளியாகி உள்ளது.
கோரிக்கை:
இருவர் மட்டுமே தனியாக அமர்ந்து, தேர்வு எழுதிய விவகாரம், நாமக்கல் போலீசாரிடையே, சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அவர்களுடைய விடைத்தாளை, டி.ஐ.ஜி., ஆய்வுக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என, தேர்வர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். எழுத்துத் தேர்வில் வெற்றி பெற்றால், பெரிய அளவிலான போட்டி ஏதுமில்லாமல், நேரடியாக, எஸ்.ஐ., பணியில் சேர வாய்ப்புள்ளதாக தெரிகிறது. முறைகேடு நடந்திருந்தால், தேர்வு எழுதிய அனைவரும் பாதிப்புக்குள்ளாக நேரிடும். இது தொடர்பாக உரிய விசாரணை நடத்த வேண்டும் என, மாவட்ட போலீசாரே வலியுறுத்துகின்றனர்.
எஸ்.பி., மழுப்பல் பதில்:
நாமக்கல் மாவட்ட எஸ்.பி., செந்தில்குமார் கூறியதாவது: ஒரு அறைக்கு, 20 பேர் என்ற வகையில், தேர்வு எழுதுவோரை அமர வைத்தோம். கடைசியாக, 22 பேர் என வந்ததால், இருவர் மட்டும் தனியாக உட்கார வைக்கப்பட்டனர். அவர்களுக்கும், தனியாக கண்காணிப்பாளர் நியமிக்கப்பட்டிருந்தனர். டிரைவர் யாரும் கிடையாது. வாசுதேவன், சத்தியமூர்த்தி யார் என்றே எனக்கு தெரியாது. ஒருவருக்கும், மற்றொருவருக்கும், கேள்வித்தாள் வேறுபடும். தேவையில்லாத தகவல்களை யாராவது கூறலாம். பணம் பெற்றுக்கொண்டு, தேர்வு எழுத வைத்தோம் என கூறுவது, தவறான தகவல். இவ்வாறு, அவர் கூறினார்.

Popular posts from this blog

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

முன்னுதாரணமாக விளங்கும் வடமணப்பாக்கம் அரசு தொடக்கப் பள்ளி

எண்ம முறையில் பாடம் கற்றல், குழந்தைகள் நூல்கள் வாசித்தல், கணினிபயிற்சி பெறுதல், அறிவியல் ஆய்வகம் என பல சிறப்பு அம்சங்களுடன் சுகாதாரம், ஒழுக்கம் ஆகியவற்றுடன் சேர்ந்து கல்வி கற்பிக்கப்படுகிறது.