Skip to main content

மத்திய அரசு ஊழியர்களுக்கு வீட்டு வாடகை படி உயர்கிறது

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில், நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில், நேற்று எடுக்கப்பட்ட சிலமுடிவுகள் விவரம்: l மத்திய அரசு ஊழியர்களுக்கு, வீட்டுவாடகை மற்றும் பயணப்படியை அதிகரிக்கும் வகையில், 2011ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு அடிப்படையில், 29 நகரங்கள் மற்றும் சிறு நகரங்களை தர
ம் உயர்த்த, மத்திய அமைச்சரவை சம்மதம் தெரிவித்தது.
இதன்படி
, மாற்றி அமைக்கப்பட்ட நகரங்களில் பணிபுரியும் மத்திய அரசு ஊழியர்கள், 2014 ஏப்ரல், 1ம் தேதி முதல், உயர்த்தப்பட்ட வீட்டு வாடகை படி மற்றும் பயணப் படியை பெறலாம். இதனால், மத்திய அரசுக்கு, 128 கோடி ரூபாய் கூடுதல் செலவாகும். மத்திய அரசின் இந்த முடிவால், தமிழகத்தில், ஈரோடு, கோயம்புத்துார் நகரங்களில் பணியாற்றும் மத்திய அரசு ஊழியர்கள், கூடுதல் வீட்டு வாடகை மற்றும் பயணப் படியை பெறலாம். 
l குறு, சிறு மற்றும் மத்திய தர தொழில் நிறுவனங்கள் துறையில், இந்தியா - சுவீடன் இடையே, ஒத்துழைப்பை ஏற்படுத்துவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கும், நேற்று ஒப்புதல் தரப்பட்டது.ஆள் கடத்தலை தடுக்கவும், கடத்தலால் பாதிக்கப்படுவோரை, மீண்டும் அவர்களின் குடும்பத்தினருடன் ஒன்று சேர்க்கவும் தேவையான வழிமுறைகள் அடங்கிய ஒப்பந்தம், இந்தியா - வங்கதேசம் இடையே, விரைவில் கையெழுத்தாக உள்ளது. இந்த புரிந்துணர்வுஒப்பந்தத்திற்கும், மத்திய அமைச்சரவை நேற்று அனுமதி வழங்கியது.

Popular posts from this blog

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

கணக்கெடுப்பு ! : பள்ளி செல்லா மாணவர்கள்...: ஏப்., 7ம் தேதி முதல் துவக்கம்

கடலூர் மாவட்டத்தில், அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு இடைநின்ற மாணவ, மாணவிகள் குறித்த விவரங்கள் கணக்கெடுக்கும் பணி வரும் 7ம் தேதி, துவங்குகிறது. தமிழகத்தில், ஆண்டுதோறும் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், 6 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு

10ம் வகுப்பு கணிதத்தேர்வில் போனஸ் மதிப்பெண்

பத்தாம் வகுப்பு தேர்விற்கான விடைத்தாள்கள் திருத்தும் பணி நடக்கிறது. பத்தாம் வகுப்பு கணிதத்தேர்வில், 'ஏ' பிரிவு ஒரு மதிப்பெண் வினாவிற்கான 15 வது கேள்வியில் ஆங்கில வழி வினா தவறாக கேட்கப்பட்டுள்ளதா