Skip to main content

மதுரை மாவட்டத்தில் சமையல் உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்

மதுரை மாவட்டத்தில் சத்துணவு மையங்களில் காலியாக உள்ள சமையல் உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்
மதுரை மாவட்டத்தில் உள்ள சத்துணவு மையங்களில் காலியாக உள்ள சமையல் உதவியாளர் பணிக்கு தகுதி உள்ளவர்கள் விண்ண
ப்பிக்கலாம் என்று கலெக்டர் தெரிவித்துள்ளார்.

சமையல் உதவியாளர்

மதுரை மாவட்டத்தில் எம்.ஜி.ஆர். சத்துணவு திட்டத்தின் கீழ் செயல்படும் பள்ளி சத்துணவு மையங்களில் காலியாக இருக்கும் சமையல் உதவியாளர் பணியிடங்களுக்கு நேரடி நியமனம் மூலம் தகுதி வாய்ந்த நபர்களை தேர்வு செய்ய அறிவிப்பு வெளியாகி உள்ளது. சமையல் உதவியாளர் பணிக்கு பொது மற்றும் தாழ்த்தப்பட்ட வகுப்பினர் 21 வயது பூர்த்தியடைந்தும் 40 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும். 5-ம் வகுப்பு தேர்ச்சி அல்லது தேர்ச்சி பெறாதவராக இருக்க வேண்டும். 


பழங்குடியினர் 18 வயது பூர்த்தியடைந்து 40 வயதுக்கு மிகாதவராகவும் எழுதப்படிக்க தெரிந்தவராக இருக்க வேண்டும். விதவை மற்றும் கணவனால் கைவிடப்பட்டவர்கள் 20 வயது பூர்த்தியடைந்தும் 40 வயதுக்கு மிகாதவராகவும் இருக்க வேண்டும். பொது, தாழ்த்தப்பட்ட வகுப்பினர் 5-ம் வகுப்பு தேர்ச்சி அல்லது தேர்ச்சி பெறாதவராக இருக்க வேண்டும். பழங்குடியினர் எழுதப்படிக்க தெரிந்திருக்க வேண்டும். 

விண்ணப்பங்கள்

இந்த தகுதிகளை பெற்றிருப்பவர்கள் வருகிற 15-ந்தேதிக் குள் சம்பந்த பட்ட ஊராட்சி ஒன்றிய, நகராட்சி, மாநகராட்சி ஆணையாளர்களுக்கு விண்ணப்பங்களை அனுப்பலாம். விண்ணப்பத்துடன் கல்வி தகுதி சான்றிதழ், சாதி சான்றிதழ், குடும்ப அட்டை மற்றும் இருப்பிட சான்று ஆகியவற்றின் அத்தாட்சி செய்யப்பட்ட நகல் இணைக்கப்பட வேண்டும்.

விதவை மற்றும் கணவனால் கைவிடப்பட்டவர் அதற்கான சான்றிதழின் நகலை விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும். நேர்முக தேர்வின் போது அசல் சான்றுகள் அளிக்கப்பட வேண்டும். மேலும் விபரங்களுக்கு மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர், சம்பந்த பட்ட ஊராட்சி ஒன்றிய ஆணையாளர்கள், சம்பந்த பட்ட நகராட்சி ஆணையாளர்கள், மாநகராட்சி கல்வி அலுவலர் ஆகியோரை தொடர்பு கொள்ளலாம். இந்த தகவலை கலெக்டர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். 

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு