Skip to main content

நாளை அரசுப் பள்ளி ஆய்வக உதவியாளர் தேர்வு 4,362 இடங்களுக்கு 8.87 லட்சம் பேர் போட்டி

அரசுப் பள்ளி ஆய்வக உதவியாளர் பணிக்கான எழுத்துத் தேர்வு நாளைதமிழகம் முழுவதும் 1,800 மையங்களில் நடக்கிறது. இந்தத் தேர்வை 8 லட்சத்து 87 ஆயிரம் பேர் எழுதுகிறார்கள். அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்டத்தின்கீழ் அரசு மேல்நிலை மற்றும் உ
யர்நிலைப் பள்ளிகளில் 4,362 ஆய்வக உதவியாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர். இதற்காக ஆன்லைனில் விண்ணப்பங்கள் பெறப்பட்டன.
ஆய்வக உதவியாளர் பணிக்கான கல்வித் தகுதி 10-ம் வகுப்பு தேர்ச்சி என்ற போதிலும் பட்டதாரிகளும் விண்ணப்பித் திருக்கிறார்கள். முதல்கட்டமாக எழுத்துத் தேர்வு நடத்தி அதன் பிறகு நேர்காணல் மூலம் நியமனம்நடைபெறும் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவித்திருந்தது. அதன்படி, முதல்கட்டதேர்வான எழுத்துத் தேர்வு தமிழகம் முழுவதும் 1,800 மையங்களில் நாளை காலை (ஞாயிற்றுக் கிழமை) நடத்தப்பட உள்ளதாக அரசு தேர்வுத்துறை இயக்குநர் கே.தேவராஜன் தெரிவித்துள்ளார். தேர்வின்போது முறைகேடுகள் நடைபெறாமல் இருக்க அந்தந்த மாவட்டங்களில் கல்வித்துறை அதிகாரிகள் தலைமையில் பறக்கும் படைகள் தனியாக அமைக்கப்பட்டுள்ளன. 
இதுகுறித்து பள்ளிக் கல்வி இயக்குநர் எஸ்.கண்ணப்பன் கூறியதாவது: 
ஆய்வக உதவியாளர் தேர்வை மாவட்ட அளவில் கண்காணிக்க இயக்குநர்கள், இணை இயக்குநர்கள் என 25-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள் ளனர். இவர்கள் தவிர, மாவட்ட அளவில் முதன்மைக் கல்வி அதிகாரிகள், மாவட்ட கல்வி அதிகாரிகள், மெட்ரிகுலேஷன் பள்ளி ஆய்வாளர்கள், மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவன (டயட்) முதல்வர்கள் தலைமையில் பறக்கும் படைகள் அமைக்கப் பட்டுள்ளன.மேலும், மாவட்ட ஆட்சியர்களும் தேர்வு மையங்களை ஆய்வு செய்வார்கள். அனைத்து தேர்வு மையங்களுக்கும் போலீஸ் பாதுகாப்பு போடப்படும். இவ்வாறு கண்ணப்பன் கூறினார்.

Popular posts from this blog

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

கணக்கெடுப்பு ! : பள்ளி செல்லா மாணவர்கள்...: ஏப்., 7ம் தேதி முதல் துவக்கம்

கடலூர் மாவட்டத்தில், அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு இடைநின்ற மாணவ, மாணவிகள் குறித்த விவரங்கள் கணக்கெடுக்கும் பணி வரும் 7ம் தேதி, துவங்குகிறது. தமிழகத்தில், ஆண்டுதோறும் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், 6 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு

10ம் வகுப்பு கணிதத்தேர்வில் போனஸ் மதிப்பெண்

பத்தாம் வகுப்பு தேர்விற்கான விடைத்தாள்கள் திருத்தும் பணி நடக்கிறது. பத்தாம் வகுப்பு கணிதத்தேர்வில், 'ஏ' பிரிவு ஒரு மதிப்பெண் வினாவிற்கான 15 வது கேள்வியில் ஆங்கில வழி வினா தவறாக கேட்கப்பட்டுள்ளதா