Skip to main content

4 நகராட்சி பள்ளிகள், 26 அங்கன்வாடி மையங்களில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த திட்டம்


காஞ்சிபுரம் நகரப் பகுதியில், நகராட்சி நிதி உதவியுடன் நகராட்சி நடுநிலை மற்றும் உயர்நிலைப் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில், கழிப்பறை மற்றும் சத்துணவு மைய கட்டி
டம் இல்லாத பள்ளிகளை தேர்வு செய்து, அப்பள்ளிகளில் கட்டிடங்கள் அமைக்க நகராட்சி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.
இதன்படி, கழிப்பறை கட்டிடம் அமைக்க 4 பள்ளிகளும், சத்துணவு மைய கட்டிடம்,சமையலறை கட்டிடம் அமைக்க தலா ஒரு பள்ளியும் தேர்வு செய்யப் பட்டுள்ளன. மேலும், பராமரிப்பு பணிகள் மற்றும் சுற்று சுவர் அமைத்தல் போன்ற பணிகள் மேற்கொள்ள 20 பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இதேபோல், பராமரிப்பு மற்றும் புதுப்பிக்கும் பணிகளுக்காக 4 அங்கன்வாடி மையங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.இந்த பள்ளி மற்றும் அங்கன்வாடி மையங்களில், நகராட்சி கல்வி நிதியின் கீழ் ரூ.1.88 கோடி செலவில் மேற்கூறிய பணிகளை மேற்கொள்ள நகராட்சி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. நகர மன்ற ஒப்புதல் பெற்ற பிறகு விரைவில் பணிகள் தொடங்கும் என நகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.சூரியஒளி மின்சாரத்தின் மூலம் நகராட்சி பள்ளிகளின் மின் தேவையை பூர்த்தி செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது. முதற் கட்டமாக நகராட்சி கட்டுப் பாட்டில்உள்ள 4 பள்ளிகளில் சோலார் போர்டு அமைக்க திட்ட மிடப்பட்டுள்ளது. 
இதற்காக, இராணி அண்ணாதுரை மேல் நிலைப்பள்ளி, சிஎஸ்எம் நடுநிலைப் பள்ளி, ஒலிமுகம்மது பேட்டை நகராட்சி நடுநிலைப் பள்ளி, ஏகாம்பரநாதர் சன்னதி தெருவில் உள்ள நகராட்சி நடுநிலைப்பள்ளி ஆகியவை தேர்வு செய்யப்பட்டுள்ளன.

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு

10ம் வகுப்பு துணைத்தேர்வு தக்கலில் விண்ணப்பிக்க ஏற்பாடு

கடந்த பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் தோல்வி அடைந்த மாணவ, மாணவியருக்காக ஜூன், ஜூலை மாதங்களில் சிறப்பு துணைத்தேர்வு நடத்தப்படுகிறது. கடைசி நாள் வரை விண்ணப்பிக்காதவர்கள்