Skip to main content

சாலை ஆய்வாளர் பணிக்கு விண்ணப்பிக்க 31-ம்தேதி வரை கால அவகாசம் நீட்டிப்பு


சாலை ஆய்வாளர் பணிக்கு விண்ணப்பிக்க வரும் 31-ம்தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் ச.ஜெயந்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: 
கரூர் மாவட்ட உள்ளாட்சித்துறை பொறியியல் பிரிவில் 14 சாலை ஆய்வாளர் பதவிகள் காலியாகஉள்ளன. இந்த பணிக்கு நே
ரடி நியமனம் மூலம் ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதில் ஐடிஐ சிவில் டிராப்ட்மேன்சிப் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஆதிதிராவிடர், அருந்ததியர் மற்றும் அனைத்து வகுப்பைச் சேர்ந்த விதவை பெண்கள் 18 வயது முதல் 35 வயதுக்குள் இருக்க வேண்டும். மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், சீர்மரபினர் மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்(முஸ்லிம்) மற்றும் மற்ற பிரிவினர் 18 முதல் 35 வயதுக்குள் இருக்க வேண்டும்.
இந்த இடங்களுக்கு இனசுழற்சி மற்றும் முன்னுரிமை அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள்.தகுதியுள்ளவர்கள் வரும் 31-ம்தேதிக்குள் மாவட்ட ஆட்சியர் (வளர்ச்சிப்பிரிவு), அறை எண் 203, மாவட்ட ஆட்சியரகம், கரூர்-639 007என்ற முகவரிக்கு விண்ணப்பிக்க வேண்டும். இதற்கு தனி விண்ணப்ப படிவம் இல்லை. வெள்ளைத்தாளில் எழுதி அனுப்ப வேண்டும். கல்வித்தகுதிக்கான சான்றிதழ் நகலை சுயசான்றொப்பம் செய்து இணைத்து அனுப்ப வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்