Skip to main content

அரசு கல்லூரிகளில் வரும் 30க்குள் மாணவர் சேர்க்கை


அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்லூரிகளில், மாணவர் சேர்க்கையை, வரும் 30ம் தேதிக்குள் முடிக்க, உயர்கல்வித் துறை செயலர் உத்தரவிட்டு உள்ளார்.

கல்லூரி பேராசிரியர் ஒருவர் கூறியதாவது: நடப்பாண்டு முதன்முறையாக, கல்லூரிகளில் சேரும் மாணவ, மாணவியரு
க்கு, ஜூன் முதல் வாரத்தில் இணைப்பு பாட போதனை வழங்க, உயர்கல்வித் துறை செயலர் உத்தரவிட்டு உள்ளார். பள்ளி வாழ்க்கை முடித்து, முதன்முறையாக கல்லூரிக்குள் நுழையும் மாணவ, மாணவியருக்கு, கல்லூரி செயல்பாடு, கல்வி முறை, கல்லூரி சூழல் உட்பட, விவரங்களை கற்றுக் கொடுத்து, அவர்களை கல்லூரி வகுப்புக்கு தயார்படுத்தும்
பயிற்சி வழங்கப்பட உள்ளது. அதற்காக தான், முன்கூட்டியே மாணவர் சேர்க்கை நடத்தி முடிக்க, உயர்கல்வித் துறை உத்தரவிட்டு உள்ளது. கடந்த ஆண்டு வரை, கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை தொடர்பான முடிவுகளை, பல்கலை நிர்வாக குழு தான் எடுக்கும். இந்தாண்டு, பல்கலை நிர்வாக குழுவிடம், எந்தவித கலந்தாய்வும் நடத்தாமல், உயர்கல்வித் துறை செயலரே, மாணவர் சேர்க்கைக்கான தேதியை முடிவு செய்து அறிவித்து உள்ளார். இவ்வாறு, அவர் தெரிவித்தார்.

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்