Skip to main content

ஏழை மாணவர்களுக்கான 25% சேர்க்கை: தனியார் பள்ளிகளுக்கு அமைச்சர் எச்சரிக்கை


மத்திய அரசின் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி, ஏழை மாணவர்கள் 25 சதவீதம் சேர்க்கையை அளிக்காத தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக் கல்வித்
துறை அமைச்சர் கே.சி.வீரமணி கூறினார்.
வேலூர் மாவட்டம், வாணியம்பாடி அருகேயுள்ள ஏலகிரிமலையில் இரு நாள் கோடை விழா சனிக்கிழமை தொடங்கியது.
இந்த விழாவில் அணைக்கட்டு எம்எல்ஏ ம.கலையரசு பேசுகையில், தமிழகத்தில் ஏழை, எளிய மாணவர்கள் தலைசிறந்த தனியார் கல்வி நிறுவனங்களிலும் பயில வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தோடு அரசு நிதி ஒதுக்கீடு செய்துவருகிறது. ஆனால், தனியார் கல்வி நிறுவனங்கள் 25 சதவீதம் மாணவர்களுக்கு இடஒதுக்கீட்டை ஏழை, எளிய மாணவர்களுக்கு ஒதுக்குவதில்லை. இதுதொடர்பாக முதல்வர் ஜெயலலிதா கட்டாயமாக நடவடிக்கை எடுப்பார் என்றார்.
இதற்குப் பதில் அளிக்கும் வகையில், பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் கே.சி.வீரமணி பேசியதாவது:
இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி, தனியார் பள்ளிகளில் ஏழை மாணவர்களை 25 சதவீதம் அரசு நிர்ணயித்துள்ள கட்டணத்தில் சேர்க்க வேண்டும் என்ற நோக்கத்தோடு, ரூ.97 கோடி நிதியை முதல்வர் ஜெயலலிதா அண்மையில் ஒதுக்கீடு செய்தார்.
எனவே, எந்தவொரு தனியார் பள்ளியாவது இந்தச் சட்டத்தின்படி, மாணவர்களைச் சேர்க்க மறுத்தால் அந்த பள்ளி மீது கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

Popular posts from this blog

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

கணக்கெடுப்பு ! : பள்ளி செல்லா மாணவர்கள்...: ஏப்., 7ம் தேதி முதல் துவக்கம்

கடலூர் மாவட்டத்தில், அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு இடைநின்ற மாணவ, மாணவிகள் குறித்த விவரங்கள் கணக்கெடுக்கும் பணி வரும் 7ம் தேதி, துவங்குகிறது. தமிழகத்தில், ஆண்டுதோறும் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், 6 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு

10ம் வகுப்பு கணிதத்தேர்வில் போனஸ் மதிப்பெண்

பத்தாம் வகுப்பு தேர்விற்கான விடைத்தாள்கள் திருத்தும் பணி நடக்கிறது. பத்தாம் வகுப்பு கணிதத்தேர்வில், 'ஏ' பிரிவு ஒரு மதிப்பெண் வினாவிற்கான 15 வது கேள்வியில் ஆங்கில வழி வினா தவறாக கேட்கப்பட்டுள்ளதா