Skip to main content

'குரூப் - 1' முதன்மை தேர்வு:டி.என்.பி.எஸ்.சி., அறிவிப்பு

'தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான டி.என்.பி.எஸ்.சி., நடத்தும்,குரூப் - 1 முதன்மைத் தேர்வு, ஜூன், 5, 6, 7ம் தேதிகளில், சென்னையில் நடக்கும்' என,அறிவிக்கப்பட்டு உள்ளது.தமிழகத்தில், துணை ஆட்சியர், போலீஸ் துணை கண்காணிப்பாளர்
உள்ளிட்ட உயர் பதவிகளில், காலியாக உள்ள, 79 இடங்களை நிரப்ப, முதல்நிலைத் தேர்வு, 2014 ஜூலை 20ம் தேதி நடந்தது; இதன் முடிவுகள், ஜன., 30ம் தேதி வெளியானது.இதில்,
அடுத்தகட்ட முதன்மை எழுத்துத் தேர்வுக்கு, 4,000 பேர் தேர்வு பெற்றனர்.முதன்மை தேர்வு குறித்த முறையான அறிவிப்பை, டி.என்.பி.எஸ்.சி., வெளியிட்டு உள்ளது. தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் வெளியிட்டுள்ள அறிவிப்பு:குரூப் - 1 முதன்மை தேர்வு, ஜூன் 5, 6 மற்றும் 7ம் தேதிகளில், சென்னை தேர்வு மையங்களில் நடத்தப்படும். 
தேர்வுக்கு அனுமதிக்கப்பட்டோரின், 'ஹால் டிக்கெட்', தேர்வாணைய இணையதளத்தில்வெளியிடப்பட்டு உள்ளது.சந்தேகமிருப்பின், contacttnpsc@gmail.com என்ற, இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.மேலும், 1800 425 1002 என்ற, கட்டணமில்லா தொலைபேசி எண்ணிலும் கேட்டு தெரிந்து கொள்ளலாம்.இவ்வாறு, அவர் தெரிவித்து உள்ளார்.

Popular posts from this blog

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - செயல்முறைகள்

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - இயக்குனர் செயல்முறைகள்

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்