Skip to main content

காஞ்சிபுரம் மாவட்டத்துக்கு ஜூன் 1 விடுமுறை

வரதராஜ பெருமாள் கோயிலில் வரும் 1-ம் தேதி நடைபெற உள்ள கருடசேவை உற்சவத்தை முன்னிட்டு, அன்றைய தினம் காஞ்சிபுரம் மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப் படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

காஞ்சிபுரம் நகரில் அமைந்துள்ள பிரசித்திபெற்ற வரதராஜ பெருமாள் கோயில் அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள
து. இங்கு ஆண்டுதோறும் வைகாசி மாத பிரம்மோற்சவம் 10 நாட்கள் நடைபெறும். இந்த ஆண்டுக்கான பிரம் மோற்சவம் வரும் 30-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது.இதைத் தொடர்ந்து வரும் 1-ம் தேதி திங்கள்கிழமை பிரசித்தி பெற்ற கருடசேவை உற்சவம் நடைபெற உள்ளது.
இதை முன்னிட்டு, பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் வசதிக்காக அன்றைய தினம் மாவட்டத்துக்கு உள் ளூர் விடுமுறை அளிக்கப் படுவதாக, மாவட்ட ஆட்சியர் சண்முகம் அறிவித்துள்ளார். இந்த விடுமுறையை ஈடுசெய்யும் வகையில், ஜூன் மாதம் 2-வது சனிக் கிழமையான வரும்13-ம் தேதி பணி நாளாக அறிவிக்கப் பட்டுள்ளது.

Popular posts from this blog

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

கணக்கெடுப்பு ! : பள்ளி செல்லா மாணவர்கள்...: ஏப்., 7ம் தேதி முதல் துவக்கம்

கடலூர் மாவட்டத்தில், அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு இடைநின்ற மாணவ, மாணவிகள் குறித்த விவரங்கள் கணக்கெடுக்கும் பணி வரும் 7ம் தேதி, துவங்குகிறது. தமிழகத்தில், ஆண்டுதோறும் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், 6 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு

10ம் வகுப்பு கணிதத்தேர்வில் போனஸ் மதிப்பெண்

பத்தாம் வகுப்பு தேர்விற்கான விடைத்தாள்கள் திருத்தும் பணி நடக்கிறது. பத்தாம் வகுப்பு கணிதத்தேர்வில், 'ஏ' பிரிவு ஒரு மதிப்பெண் வினாவிற்கான 15 வது கேள்வியில் ஆங்கில வழி வினா தவறாக கேட்கப்பட்டுள்ளதா