Skip to main content

தமிழ்நாட்டில் ஜூன் 1-ந்தேதி பள்ளிகள் திட்டமிட்டபடி திறப்பு; தினத்தந்தி

தமிழ்நாட்டில் ஜூன் 1-ந்தேதி பள்ளிகள் திட்டமிட்டபடி திறப்பு; பள்ளிக்கல்வித்துறை தகவல்-தினத்தந்தி
தமிழ்நாட்டில் பள்ளிகள் ஜூன் 1-ந்தேதி திட்டமிட்டபடி திறக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. 

வெயிலின் தாக்கம்

தமிழ்நாட்டில் பள்ளிகளுக்கு கோடைவிடுமுறை அளிக்கப்
பட்டுள்ளது. வருகிற ஜூன் 1-ந்தேதி கோடைவிடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை ஏற்கனவே அறிவித்து இருந்தது.

இந்த நிலையில் அக்னி நட்சத்திரம் என்று சொல்லப்படும் கத்தரி வெயில் தொடங்கி பொதுமக்களை வாட்டி வதைத்து வருகிறது.

பெரியவர்களாலேயே இந்த வெயிலின் தாக்கத்தை தாங்க முடியவில்லை. இந்த வெயிலுக்கு பயந்து சிலர் பிற்பகல் நேரத்தில் வெளியில் செல்வதை தவிர்த்து வருகின்றனர்.


முற்றுப்புள்ளி

கடந்த சில நாட்களாக அக்னி நட்சத்திர வெயிலின் கோரத்தாண்டவம் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. தமிழ்நாட்டில் மட்டும் அல்லாது பிற மாநிலங்களிலும் வெயிலின் தாக்கம் அதிகரித்து தான் காணப்படுகின்றது.

வெயிலின் தாக்கம் அதிகரிப்பால் இந்தியா முழுவதும் ஏராளமானோர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி வருகின்றன.

இந்த வெயிலினால் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு பாதிப்பு எதுவும் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக புதுச்சேரியில் ஜூன் 1-ந்தேதிக்கு பதிலாக, ஜூன் 12-ந்தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல், தமிழகத்திலும் பள்ளிகள் ஜூன் 1-ந்தேதிக்கு பதிலாக மாற்று தேதியில் பள்ளிகள் திறக்கப்பட வாய்ப்பு இருக்கலாம் என்று சில தகவல்கள் கடந்த சில நாட்களாக பரவி வந்தன.

ஆனால் அவை அனைத்துக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக திட்டமிட்டபடி ஜூன் 1-ந்தேதி தமிழ்நாட்டில் பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

திட்டமிட்டபடி திறப்பு

இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை செயலாளர் சபீதாவிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் காரணத்தை முன்வைத்து பள்ளிகள் திறப்பதில் தாமதம் ஏற்படும், மாற்று தேதி அறிவிக்கப்படும் என்று தகவல்கள் வெளிவருகின்றன. ஆனால் பள்ளிகள் திறப்பதில் எந்தவித மாற்றமும் செய்யப்படவில்லை.

தமிழகத்தில் அனைத்து பள்ளிகளும் திட்டமிட்டபடி ஜூன் 1-ந்தேதி (திங்கட்கிழமை) திறக்கப்படும். பள்ளிகள் திறக்கப்படும் அதே நாளில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு இலவச நோட்டு புத்தகங்கள் மற்றும் சீருடைகள் வழங்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு