Skip to main content

சிவில் சர்வீசஸ் பணிகளுக்கான மெயின் தேர்வு முடிவு வெளியீடு


சிவில் சர்வீசஸ் மெயின் தேர்வு முடிவு வெளியிடப்பட்டுள்ளது. சைதை துரைசாமியின் மனித நேய மையத்தில் பயிற்சி பெற்றவர்களில் 71 பேர் தேர்வு பெற்றுள்ளனர். நேர்முகத்தேர்வு 27-ந் தேதி தொடங்குகிறது.

ஐ.ஏ.எஸ். மெயின் தேர்வு

அகில இந்திய அளவில் மத்திய தேர்வாணையம் ஆண்டுதோறும்
ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.ஆர்.எஸ். உள்ளிட்ட 24 வகையான அகில இந்திய பணிகளுக்கான தேர்வை நடத்துகிறது. முதலில் முதல்நிலை தேர்வு நடத்தப்பட்டு அதில் தேர்ச்சி பெற்றவர்கள் மெயின் தேர்வுக்கு அனுமதிக்கப்படுவார்கள். மெயின் தேர்வில் தேர்வு பெற்றவர்கள் நேர்முகத்தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள். மெயின் தேர்விலும், நேர்முகத்தேர்விலும் அதிக மதிப்பெண் பெற்றவர்கள் தேர்ந்து எடுக்கப்பட்டு இறுதியாக அறிவிக்கப்படுவார்கள்.


அதன்படி 1300 பணியிடங்களுக்கு கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் 24-ந் தேதி முதல் நிலை தேர்வு நடத்தப்பட்டது. இந்த தேர்வை 9 லட்சம் பேர் எழுதினார்கள். முடிவு அக்டோபர் மாதம் 14-ந் தேதி வெளியிடப்பட்டது. அதில் 17 ஆயிரம் பேர் தேர்வு செய்யப்பட்டனர். மெயின் தேர்வு கடந்த டிசம்பர் மாதம் 14-ந் தேதி முதல் 20-ந் தேதி வரை நடந்தது. இதை 17 ஆயிரம் பேர் எழுதினார்கள். மெயின் தேர்வு முடிவு வெளியிடப்பட்டது. 3 ஆயிரத்து 293 பேர் தேர்வு பெற்றுள்ளனர். மெயின் தேர்வில் வெற்றி பெற்ற அனைவரும் வருகிற 27-ந் தேதி முதல் டெல்லியில் நடைபெற உள்ள நேர்முகத்தேர்வுக்கு செல்ல இருக்கிறார்கள். நேர்முகத்தேர்வு முடிந்த பின்னர் இறுதியாக தேர்ந்து எடுக்கப்பட்டோர் பட்டியல் வெளியிடப்படும்.

மனிதநேய மையத்தில் 71 பேர் தேர்வு

சென்னை மாநகராட்சி மேயர் சைதை துரைசாமியின் மனிதநேய பயிற்சி மையத்தில் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். உள்ளிட்ட சிவில் சர்வீசஸ் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி நடத்தப்படுகிறது. அந்த பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்ற 71 பட்டதாரிகள் சிவில் சர்வீசஸ் மெயின் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர். அவர்களில் 42 பேர் மாணவர்கள். 29 பேர் மாணவிகள்.

இது குறித்து மனிதநேய மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், முதன்மை தேர்வில் வெற்றி பெற்றுள்ள அனைத்து மாணவ-மாணவிகளுக்கும் நேர்முகத்தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் இலவசமாக நடத்தப்பட உள்ளன. இந்த பயிற்சியில் கலந்துகொள்ள விரும்பும் தேர்ச்சி பெற்ற அனைத்து மாணவ-மாணவிகள் தங்களுடைய பாஸ்போர்ட் அளவு புகைப்படம், எழுத்து தேர்வுக்கான நுழைவுச்சீட்டு ஆகியவற்றுடன் இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் எமது மையத்தில் நேரில் வந்து பதிவு செய்து கொள்ளலாம்.

இலவச பயிற்சி

அவ்வாறு நேர்முகத்தேர்வுக்கு பதிவு செய்து கொள்ளும் அனைவருக்கும் இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட உள்ளன. இந்த நேர்முகத்தேர்வுக்கான பயிற்சி வகுப்பில் கலந்துகொள்ளும் அனைத்து மாணவ-மாணவிகளுக்கும் அனைத்து வசதிகளும் இலவசமாக செய்து தரப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது. 

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு