Skip to main content

அரசு விளையாட்டு விடுதியில் சேர அழைப்பு


தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மூலம், பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியருக்கு விளையாட்டு துறையில் சாதனைகள் படைப்பதற்கு ஏற்ப பயிற்சி, தங்கும் வசதியுடன், சத்தான உணவுடன் கூடிய, 28 வி
ளையாட்டு விடுதிகள் செயல்பட்டு வருகிறது.
வரும் 2015- 16ம் ஆண்டு விளையாட்டு விடுதியில், மாணவர்களுக்கு தடகளம், சிறகு பந்து, கூடைபந்து, குத்துசண்டை, கிரிக்கெட், கால்பந்து, வாள் சண்டை, ஜிம்னாஸ்டிக், கைப்பந்து, ஹாக்கி, நீச்சல், டேக்வோண்டோ, வாலிபால், பளு தூக்குதல், கபடி, மாணவிகளுக்கு தடகளம், கூடைப்பந்து, கால்பந்து, வாள் சண்டை, கைப்பந்து, ஹாக்கி, டென்னீஸ், வாலிபால், பளு தூக்குதல், கபடி சேர்க்கை நடக்க உள்ளது.

இதில், ஏழு, எட்டு, ஒன்பது, ப்ளஸ் 1 வகுப்புகளில் மாணவ, மாணவியருக்கான சேர்க்கை, மே, 3ம் தேதி, ஈரோடு வ.உ.சி., பூங்காவில் காலை, எட்டு மணிக்கு நடக்கிறது.
மாணவியருக்கு, ஈரோடு, திருவண்ணாமலை, திண்டுக்கல், நாகர்கோவில், பெரம்பலூர், தேனி, புதுக்கோட்டை, தர்மபுரி, சென்னை நேரு விளையாட்டு அரங்கம், ஈரோடு திண்டல் பாரதி வித்யாபவன், நாமக்கல் செல்வம் மேல்நிலை பள்ளியில் விடுதி உள்ளது.
மாணவர்களுக்கு மதுரை, திருச்சி, திருநெல்வேலி, கிருஷ்ணகிரி, கோவை, கடலூர், தஞ்சாவூர், அரியலூர், தூத்துக்குடி, சிவகங்கை, தேனி, ராமநாதபுரம், ஊட்டி, விழுப்புரம், சென்னை ஒய்.எம்.சி.ஏ., பள்ளி, நெய்வேலி என்.எல்.சி., பள்ளி, சென்னை புதூர் அரசு மேல்நிலை பள்ளி, நாமக்கல் செல்வம் மேல்நிலை பள்ளியில் மாணவர் விடுதி உள்ளது.
விடுதியில் சேர விண்ணப்பிக்க படிவத்தை, பத்து ரூபாய் செலுத்தி, ஈரோடு மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலரிடம் இருந்து பெற்று கொள்ள வேண்டும். விளையாட்டு விடுதி சார்பான விபரங்களை, www.sdat.in என்ற இணையதள முகவரியில் தெரிந்து கொள்ளலாம். மாவட்ட, மாநில, தேசிய அளவில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை 25ம் தேதி மாலை 5.30 மணிக்குள், மாவட்ட விளையாட்டு அலுவலகத்தில் சமர்பிக்க வேண்டும். மேலும் விபரங்களுக்கு, மாவட்ட விளையாட்டு அலுவலரை 0424- 2223157 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு