Skip to main content

தொகுப்பூதியம் பெறுவோருக்கு தனிப்பட்ட தொகை உயர்த்தி அறிவிப்பு


தொகுப்பூதியம் பெறுவோருக்கு, தனிப்பட்ட தொகையாக, மாதத்திற்கு 20 ரூபாய் முதல், 40 ரூபாய் வரை வழங்க, அரசு உத்தரவிட்டுள்ளது. முறையான மற்றும் சிறப்பு காலமுறை ஊதியம் பெறும் அரசு அலுவலர்களுக்கு,
ஜனவரி 1ம் தேதியில் இருந்து, அகவிலைப்படி உயர்த்தப்பட்டுள்ளது. எனவே, திருத்தப்பட்ட தொகுப்பூதியம், நிலையான ஊதியம், மதிப்பூதியம் பெறுவோருக்கு, ஜனவரி 1ம் தேதியில் இருந்து, தனிப்பட்ட தொகையை உயர்த்தி வழங்க, அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, 2006 ஜனவரி 1ம் தேதியில் இருந்து, மாதத்திற்கு, 600 ரூபாய் வரை தொகுப்பூதியம் பெறுவோருக்கு, மாதம், 20 ரூபாய்; 600 ரூபாய்க்கு மேல் திருத்தப்பட்ட தொகுப்பூதியம் பெறுவோருக்கு, மாதம், 40 ரூபாய் வழங்க,
அரசு உத்தரவிட்டுள்ளது. இவர்களுக்கு ஜனவரி, பிப்ரவரி, மார்ச் மாதங்களுக்கான, தனிப்பட்ட நிலுவைத் தொகை, உடனடியாக ரொக்கமாக வழங்கப்பட வேண்டும். உள்ளாட்சிகளில் பணியாற்றும் பணியாளர்களுக்கும், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை கீழ் பணியாற்றும், மேல்நிலை நீர்தேக்கத் தொட்டி இயக்குபவர்கள் மற்றும் துப்புரவுப் பணியாளர்களுக்கும், இந்த ஆணை பொருந்தும் என, நிதித் துறை செயலர் சண்முகம் பிறப்பித்த அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Popular posts from this blog

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

முன்னுதாரணமாக விளங்கும் வடமணப்பாக்கம் அரசு தொடக்கப் பள்ளி

எண்ம முறையில் பாடம் கற்றல், குழந்தைகள் நூல்கள் வாசித்தல், கணினிபயிற்சி பெறுதல், அறிவியல் ஆய்வகம் என பல சிறப்பு அம்சங்களுடன் சுகாதாரம், ஒழுக்கம் ஆகியவற்றுடன் சேர்ந்து கல்வி கற்பிக்கப்படுகிறது.