Skip to main content

கால்நடை மருத்துவக் கலந்தாய்வு: ஆன்-லைன் பதிவை அறிமுகம் செய்ய முடிவு


கால்நடை மருத்துவப் படிப்புகளில் 2015-16 கல்வியாண்டு மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வுக்கு ஆன்-லைன் பதிவு முறையை அறிமுகப்படுத்த தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் முடிவு செய்துள்ளது. இதற்கான மென்பொருள் த
யாரிக்கும் பணியை பல்கலைக்கழகம் இப்போது தீவிரப்படுத்தியுள்ளது.
தமிழகத்தில், சென்னை வேப்பேரி கால்நடை மருத்துவக் கல்லூரி, நாமக்கல், திருநெல்வேலி, ஒரத்தநாடு கால்நடை மருத்துவக் கல்லூரிகளில் மொத்தமுள்ள 280 பி.வி.எஸ்சி. இடங்கள், தலா 20 இடங்களைக் கொண்ட பி.டெக். உணவு தொழில்நுட்பம், பி.டெக். கோழி வளர்ப்பு தொழில்நுட்பம், பி.டெக். பால் தொழில்நுட்பம் உள்ளிட்ட படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வை தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் நடத்தி வருகிறது.
இந்தப் படிப்புகளில் 2015-16 கல்வியாண்டு மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு வருகிற ஜூலை மாத இறுதியில் நடத்தப்பட உள்ளது. இதற்கு விண்ணப்பிக்க ஆன்-லைன் பதிவு முறையை அறிமுகம் செய்ய பல்கலைக்கழகம் திட்டமிட்டுள்ளது.
இதுகுறித்து பல்கலைக்கழகத் துணைவேந்தர் சு.திலகர் "தினமணி'க்கு அளித்த பேட்டி:
கால்நடை மருத்துவப் படிப்பு கலந்தாய்வுக்கு விண்ணப்பிக்கும் முறையை எளிமைப்படுத்தும் வகையில், முதன்முறையாக ஆன்-லைன் பதிவு முறையை 2015-16 கலந்தாய்வில் அறிமுகம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
எனவே, மையங்கள் மூலமான விண்ணப்ப விநியோகம் என்பது இருக்காது.
கலந்தாய்வுக்கு விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள், www.tanuvas.ac.in www.ednnet.inஎன்ற பல்கலைக்கழக இணையதளத்தில் ஆன்-லைனில் விவரங்களைப் பதிவு செய்ய வேண்டும்.
பின்னர், அந்த விண்ணப்பத்தைப் பிரதி எடுத்து, உரிய சான்றிதழ் நகல்கள், கட்டணத்துக்கான காசோலை ஆகியவற்றை இணைத்து தபால் மூலம் சமர்ப்பிக்க வேண்டும்.
இதற்கான மென்பொருள் தயாரிக்கும் பணி இப்போது தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கிராமப்புற மாணவர்களுக்கு, சான்றிதழ்களை ஸ்கேன் எடுத்து அனுப்புவதில் சிரமம் ஏற்படும் என்ற காரணத்தால் ஆன்-லைன் பதிவு முறை மட்டும் இப்போது அறிமுகம் செய்யப்படுகிறது.
அடுத்து வரும் ஆண்டுகளில் முழுவதும் ஆன்-லைன் விண்ணப்ப முறை அறிமுகப்படுத்தப்படும். அப்போது சான்றிதழ்களை ஸ்கேன் எடுத்து ஆன்-லைனில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்பதோடு கட்டணத்தையும் ஆன்-லைனில் செலுத்தும் நடைமுறை அறிமுகம் செய்யப்படும் என்றார்.

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு