Skip to main content

சத்துணவு ஊழியர் போராட்டம் வாபஸ் ஏன்


பிரதான கோரிக்கைகள் குறித்து பேச, குழு அமைப்பதாக, அமைச்சர் கூறியதை ஏற்று, காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை நிறுத்திக் கொண்டோம்' என, தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் மாநில தலைவர் பழ
னிச்சாமி தெரிவித்தார். காலவரைமுறை ஊதியம் வழங்க வேண்டும். ஓய்வூதியமாக குறைந்தபட்சம், 3,500 ரூபாய் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம், காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டது. சங்க நிர்வாகிகள், நேற்று தலைமைச் செயலகத்தில், அமைச்சர் வளர்மதியை சந்தித்து பேசினர்.


அதன்பின், சங்க மாநில தலைவர் பழனிச்சாமி, நிருபர்களிடம் கூறியதாவது: கோரிக்கைகளை வலியுறுத்தி, வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டோம்; அதில், 12 கோரிக்கைகளை அரசு ஏற்றுக் கொண்டது. ஓரிரு நாளில், அரசாணை வெளியிடப்பட உள்ளது. இதன் மூலம் அரசுக்கு, 30 கோடி ரூபாய் கூடுதல் செலவாகும். பிரதான கோரிக்கைகளான, ஊதிய உயர்வு, குடும்ப ஓய்வூதியம், ஆகியவை குறித்து பேச, குழு அமைக்கவும், பேச்சு மூலம் அவற்றுக்கு தீர்வு காணலாம் என, அமைச்சர் தெரிவித்தார். அதை ஏற்று, போராட்டத்தை வாபஸ் பெற்றுள்ளோம்; போராட்டத்தை வாபஸ் பெறும்படி, எங்களை யாரும் நிர்பந்திக்கவில்லை; எங்கள் போராட்டத்திற்கு, வெற்றி கிடைத்துள்ளது. இவ்வாறு, அவர் தெரிவித்தார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில தலைவி, தமிழ்செல்வி கூறும்போது,' 'தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் போராட்டம் அறிவித்ததால், அமைச்சர்கள் அனைத்து சங்கங்களையும் அழைத்து பேசினர். 12 கோரிக்கைகளை ஏற்றுக் கொண்டனர். மற்ற பிரச்னைகளை, சுமுகமாக பேசி தீர்வு காண, முடிவு செய்யப்பட்டு உள்ளது,'' என்றார்.

Popular posts from this blog

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - செயல்முறைகள்

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - இயக்குனர் செயல்முறைகள்

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்