Skip to main content

தொடக்கப்பள்ளிகளுக்கு இணையதள வசதி


உலகிலேயே மிக அதிக அளவாக சீனாவில் சுமார் 65 கோடி பேர் இணையதளம் பயன்படுத்துவதாக கடந்த ஆண்டு இறுதியில் கணக்கிடப்பட்டது. எனவே 2015-ம் ஆண்டில் கல்வியை டிஜிட்டல் மயமாக்க அரசு திட்டமிட்டு வருகிறது.

அதன்படி தொடக்கப்பள்ளி மற்றும் நடுநிலைப்பள்ளிகளுக்கு இ
ணையதள வசதியை ஏற்படுத்த கல்வி அமைச்சகம் முடிவு செய்துள்ளது. கல்வியை டிஜிட்டல் மயமாக்கும் திட்டத்தின்படி அனைத்து தொடக்கப்பள்ளிகளும் குறைந்தது ஒரு கம்ப்யூட்டராவது வைத்திருக்க வேண்டும்.
இதற்காக தொலைதூரம் மற்றும் ஊர்ப்புறங்களில் அமைந்துள்ள பள்ளிகளுக்கு உதவுமாறு மாகாண அரசுகளை கல்வி அமைச்சகம் கேட்டுக்கொண்டு வருகிறது. மேலும் மல்டி-மீடியா வகுப்பறைகளுக்கான நிதியுதவிக்கு ஆலோசனைகளையும் அரசு வழங்கி உள்ளது.

இதற்கிடையே கல்வியை டிஜிட்டல் மயமாக்கும் திட்டத்தின் கீழ் இந்த ஆண்டு அங்கன்வாடி, தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளி ஆசிரியர்கள் 26 லட்சம் பேருக்கும், 50 ஆயிரம் பள்ளி முதல்வர்களுக்கும் தகவல் தொடர்பு குறித்த பயிற்சி வழங்கவும் திட்டமிடப்பட்டு உள்ளது

Popular posts from this blog

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

கணக்கெடுப்பு ! : பள்ளி செல்லா மாணவர்கள்...: ஏப்., 7ம் தேதி முதல் துவக்கம்

கடலூர் மாவட்டத்தில், அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு இடைநின்ற மாணவ, மாணவிகள் குறித்த விவரங்கள் கணக்கெடுக்கும் பணி வரும் 7ம் தேதி, துவங்குகிறது. தமிழகத்தில், ஆண்டுதோறும் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், 6 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு

10ம் வகுப்பு கணிதத்தேர்வில் போனஸ் மதிப்பெண்

பத்தாம் வகுப்பு தேர்விற்கான விடைத்தாள்கள் திருத்தும் பணி நடக்கிறது. பத்தாம் வகுப்பு கணிதத்தேர்வில், 'ஏ' பிரிவு ஒரு மதிப்பெண் வினாவிற்கான 15 வது கேள்வியில் ஆங்கில வழி வினா தவறாக கேட்கப்பட்டுள்ளதா