Skip to main content

யுஜிசி கலைக்கப்படுகிறதா? மத்திய அமைச்சகம் விளக்கம்

பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) நாடாளுமன்றச் சட்டத்தால் உருவாக்கப்பட்டது. எனவே, அதை தனிப்பட்ட முறையில் கலைக்க முடியாது என மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.
உயர் கல்வியை சர்வதேசத் தரத்துக்கு உயர்த்தும் முயற்சிகளை மத்தி
ய அரசு எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக யுஜிசி, அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் (ஏஐசிடிஇ) ஆகியவற்றை மறுசீரமைக்க தனித் தனிக் குழுக்களை மத்திய அமைச்சகம் அமைத்தது.
இதில் யுஜிசி-யைச் சீரமைப்பதற்காக அமைக்கப்பட்ட குழு, அண்மையில் தனது அறிக்கையைச் சமர்ப்பித்தது. அதில், யுஜிசி-யைக் கலைப்பதற்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின. இது தொடர்பாக பத்திரிகைகளிலும் செய்திகள் வெளியாகின. இந்த நிலையில் இதற்குப் பதிலளிக்கும் வகையில் மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் செய்தி வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:
யுஜிசி-யை மறுசீரமைப்பதற்காக அமைக்கப்பட்ட ஹரி கௌதம் கமிட்டி அண்மையில் அறிக்கையைச் சமர்ப்பித்தது. அந்த அறிக்கை இன்னும் முழுமையாகப் பரிசீலிக்கப்படவில்லை.
இதற்கிடையே, கமிட்டி கொடுத்த அறிக்கையின் அடிப்படையில் யுஜிசி-யைக் கலைக்க மத்திய அரசு முடிவெடுத்திருப்பதாக வெளியாகும் செய்திகள் முற்றிலும் தவறானவை. இதுவரை அதுபோன்ற எந்த ஒரு முடிவும் எடுக்கப்படவில்லை.
மேலும், யுஜிசி என்பது நாடாளுமன்றச் சட்டத்தால் உருவாக்கப்பட்டது. எனவே, அதை தனிப்பட்ட முறையில் கலைத்துவிட முடியாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு