Skip to main content

இந்திய வம்சாவளி பள்ளி மாணவனுக்கு இங்கிலாந்தின் சிறப்புமிக்க இயற்பியல் பரிசு


இங்கிலாந்தில் இயற்பியல் ஆய்வுக்கு வழங்கப்படும் முக்கிய பரிசு இந்திய வம்சாவளி மாணவனின் சிறப்பு சார்பியல் கோட்பாடு தொடர்பான ஆய்வுக்கு கிடைத்துள்ளது.

கேம்பிரிட்ஜில் உள்ள ஒரு பள்ளியில் படிக்கும் பிரதாப் சிங்
என்ற அந்த மாணவன், ஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் மிக பிரபலமான  சிறப்பு சார்பியல் கோட்பாடு பற்றி ஆய்வு மேற்கொண்டான். இந்த செய்முறை விளக்கத்துடன் கூடிய ஆய்விற்கு 500 யூரோ பரிசு தொகை கொண்ட “இன்ஸ்டிடியூட் ஆப் பிசிக்ஸ் ப்ரைஸ்” கிடைத்துள்ளது. இந்த பரிசுக்கான இறுதி சுற்றில் இங்கிலாந்தை சேர்ந்த 11 முதல் 18 வயதுக்கு உட்பட்ட 200க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.
இதுபற்றி பிரதாப் சிங் கூறுகையில், “சிறப்பான இந்த பரிசை பெற்றது சிலிர்ப்பாக உள்ளது. பள்ளியில் இருக்கும் பொருட்களை கொண்டே சிறப்பு சார்பியல் கொள்கையை விளக்க, ஒரு கணித மாடலை உருவாக்க முடிந்தது மகிழ்ச்சியாக உள்ளது" என்று தெரிவித்து உள்ளார்.  
 இந்த ஆய்வுபற்றி பிரதாப் சிங் எழுதி இருக்கும் கட்டுரை இன்ஸ்டிடியூட் ஆப் பிசிக்ஸ் அமைப்பு நடத்தும் பத்திரிகையிலும் வெளிவரவிருப்பது குறிப்பிடத்தக்கது.

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு