Skip to main content

உயர் கல்வி நிறுவனங்களில் ஒரு பெண் பாதுகாவலர் கட்டாயம்


உயர் கல்வி நிறுவனங்களில் ஒரு பெண் பாதுகாவலரை நியமிக்குமாறு மாணவர் பாதுகாப்புக்கான புதிய வழிகாட்டுதலில் பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) அறிவுறுத்தியுள்ளது.
உயர் கல்வி நிறுவனங்களில் மாணவ, மாணவிகள் பல்வேறு
வகையான தாக்குதல்களுக்கு ஆளாவதைத் தடுத்து, சுமுகமான சூழ்நிலையில் தரமான கல்வி வழங்கப்படுவதை உறுதி செய்யும் வகையில் புதிய மாணவர் பாதுகாப்பு வழிகாட்டுதலை யுஜிசி வெளியிட்டுள்ளது.
இந்த வழிகாட்டுதலை உடனடியாக நடைமுறைப்படுத்துமாறும் உயர் கல்வி நிறுவனங்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளன.
இதில் இடம்பெற்றிருக்கும் முக்கிய அம்சங்கள்:
கல்வி நிறுவனம், மாணவர் விடுதி ஆகியவற்றைச் சுற்றி, சுழல் கம்பி வேலியுடன் கூடிய சுற்றுச் சுவர் அமைக்கப்பட்டிருக்க வேண்டும். அதிகபட்சம் மூன்று நுழைவு வாயில் அல்லது அதற்கு குறைவாகவே இருக்க வேண்டும்.
அந்த நுழைவு வாயிலில் குறைந்தபட்சம் 3 பாதுகாவலர்கள் பணியமர்த்தப்பட்டிருக்க வேண்டும்.
இதில், பெண்களை சோதனை செய்து அனுமதிக்க வசதியாக இந்த மூவரில் ஒரு பெண் காவலரை நியமிப்பது அவசியம்.
கல்லூரியில் மட்டுமல்லாமல், விடுதிகளிலும் உயிரி தொழில்நுட்பத்துடன் கூடிய (பயோ மெட்ரிக்) மாணவர் வருகைப் பதிவு முறை நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.
பேரழிவு மேலாண்மை பயிற்சி அனைத்து மாணவர்களுக்கும் தொடர்ந்து வழங்கப்பட வேண்டும்.
தனியார் நிறுவனங்கள், தன்னார்வ அமைப்புகளுடன் இணைந்து மாணவிகள், பெண் ஊழியர்களுக்கு தற்காப்பு பயிற்சிகளை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு வழிகாட்டுதல்கள் இடம்பெற்றுள்ளன.

Popular posts from this blog

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

கணக்கெடுப்பு ! : பள்ளி செல்லா மாணவர்கள்...: ஏப்., 7ம் தேதி முதல் துவக்கம்

கடலூர் மாவட்டத்தில், அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு இடைநின்ற மாணவ, மாணவிகள் குறித்த விவரங்கள் கணக்கெடுக்கும் பணி வரும் 7ம் தேதி, துவங்குகிறது. தமிழகத்தில், ஆண்டுதோறும் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், 6 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு

10ம் வகுப்பு கணிதத்தேர்வில் போனஸ் மதிப்பெண்

பத்தாம் வகுப்பு தேர்விற்கான விடைத்தாள்கள் திருத்தும் பணி நடக்கிறது. பத்தாம் வகுப்பு கணிதத்தேர்வில், 'ஏ' பிரிவு ஒரு மதிப்பெண் வினாவிற்கான 15 வது கேள்வியில் ஆங்கில வழி வினா தவறாக கேட்கப்பட்டுள்ளதா