Skip to main content

உயர் கல்வி நிறுவனங்களில் ஒரு பெண் பாதுகாவலர் கட்டாயம்


உயர் கல்வி நிறுவனங்களில் ஒரு பெண் பாதுகாவலரை நியமிக்குமாறு மாணவர் பாதுகாப்புக்கான புதிய வழிகாட்டுதலில் பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) அறிவுறுத்தியுள்ளது.
உயர் கல்வி நிறுவனங்களில் மாணவ, மாணவிகள் பல்வேறு
வகையான தாக்குதல்களுக்கு ஆளாவதைத் தடுத்து, சுமுகமான சூழ்நிலையில் தரமான கல்வி வழங்கப்படுவதை உறுதி செய்யும் வகையில் புதிய மாணவர் பாதுகாப்பு வழிகாட்டுதலை யுஜிசி வெளியிட்டுள்ளது.
இந்த வழிகாட்டுதலை உடனடியாக நடைமுறைப்படுத்துமாறும் உயர் கல்வி நிறுவனங்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளன.
இதில் இடம்பெற்றிருக்கும் முக்கிய அம்சங்கள்:
கல்வி நிறுவனம், மாணவர் விடுதி ஆகியவற்றைச் சுற்றி, சுழல் கம்பி வேலியுடன் கூடிய சுற்றுச் சுவர் அமைக்கப்பட்டிருக்க வேண்டும். அதிகபட்சம் மூன்று நுழைவு வாயில் அல்லது அதற்கு குறைவாகவே இருக்க வேண்டும்.
அந்த நுழைவு வாயிலில் குறைந்தபட்சம் 3 பாதுகாவலர்கள் பணியமர்த்தப்பட்டிருக்க வேண்டும்.
இதில், பெண்களை சோதனை செய்து அனுமதிக்க வசதியாக இந்த மூவரில் ஒரு பெண் காவலரை நியமிப்பது அவசியம்.
கல்லூரியில் மட்டுமல்லாமல், விடுதிகளிலும் உயிரி தொழில்நுட்பத்துடன் கூடிய (பயோ மெட்ரிக்) மாணவர் வருகைப் பதிவு முறை நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.
பேரழிவு மேலாண்மை பயிற்சி அனைத்து மாணவர்களுக்கும் தொடர்ந்து வழங்கப்பட வேண்டும்.
தனியார் நிறுவனங்கள், தன்னார்வ அமைப்புகளுடன் இணைந்து மாணவிகள், பெண் ஊழியர்களுக்கு தற்காப்பு பயிற்சிகளை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு வழிகாட்டுதல்கள் இடம்பெற்றுள்ளன.

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு