Skip to main content

நேதாஜியின் ரகசிய கோப்புகள் வெளியிட கமிட்டி அமைப்பு


நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் தொடர்புடைய ரகசிய கோப்புகளை வெளியிடுவதற்கு, கமிட்டி அமைக்கப்படுகிறது.கடந்த 1945, ஆகஸ்ட் 18ம் தேதி, தைவானில் நேதாஜியை கடைசியாக பார்த்ததாகவும், அதன் பி
ன் அவர் காணாமல் போய்விட்டதாகவும் கூறப்படுகிறது.
விமான விபத்தில் நேதாஜி இறந்திருக்கலாம் என்று கூறப்படுவதை, பலர் ஏற்கவில்லை. நேதாஜி குறித்த உண்மை தகவல்கள் அடங்கிய, 160 ரகசிய கோப்புகள் அரசிடம் உள்ளது. இந்த கோப்புகளை வெளியிட்டால் தான், நேதாஜியின் வாழ்க்கை குறித்து அனைவரும் அறிய இயலும். இந்நிலையில், கடந்த திங்கள் கிழமை இரவு, ஜெர்மனி தலைநகர் பெர்லினில், நேதாஜியின் கொள்ளுப் பேரனான சூர்யகுமார் போஸ், பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். அப்போது, நேதாஜியுடன் தொடர்புடைய அனைத்து ரகசிய கோப்புகளையும் உடனடியாக வெளியிடும்படி கோரினார். மேலும், நேதாஜியின் குடும்பத்தினரை, நேரு உளவு பார்த்ததாக வெளியான தகவல் அதிர்ச்சியளிப்பதாகக் கூறிய போஸ், அதுகுறித்த அறிக்கையையும் அளிக்கும்படி கேட்டுள்ளார். 

நேதாஜியின் வாழ்க்கையில் உள்ள உண்மைகளை அறிய ஆவலாக உள்ள, பிரதமர் மோடியும், சூர்யகுமார் போசின் கோரிக்கையை பரிசீலித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளார். அரசாங்க ரகசிய சட்டத்தை பரிசீலித்து, நேதாஜி குறித்த ரகசிய கோப்புகளை வெளியிடுவதற்கு, மத்திய அரசு ஒரு கமிட்டி அமைத்துள்ளது. இந்த கமிட்டியில், பிரதமர் அலுவலகம், ரா, ஐ.பி., உள்துறை அமைச்சக அதிகாரிகள் இடம் பெறுவர். இவர்கள், எந்தெந்த ஆவணங்களை வெளியிடலாம் என்பது குறித்து முடிவு செய்வர்.

Popular posts from this blog

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

ஆசிரியர் இல்லாமல் நாம் இல்லை!-முனைவர் மா.தச.பூர்ணாச்சாரி,வழக்கறிஞர், மதுரை.94432 66674.

ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் பள்ளிப்பருவம் முக்கியமானது. முதன் முதலாக தாய் தந்தையுடன் சென்று, புத்தாடை அணிந்து, ஆசிரியரை வணங்கி, புத்தரிசி அல்லது நெல்லில் எழுத்தை எழுதத் துவங்கிய நாளை மறக்க இயலாது.வெளி உலகைப் புரிந்து கொள்ளவும், தாய் தந்தையரால் தர முடியாத கல்வி மற்றும் பயிற்சியினை கல்வி மூலமாக ஆசிரியரால்