Skip to main content

நேதாஜியின் ரகசிய கோப்புகள் வெளியிட கமிட்டி அமைப்பு


நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் தொடர்புடைய ரகசிய கோப்புகளை வெளியிடுவதற்கு, கமிட்டி அமைக்கப்படுகிறது.கடந்த 1945, ஆகஸ்ட் 18ம் தேதி, தைவானில் நேதாஜியை கடைசியாக பார்த்ததாகவும், அதன் பி
ன் அவர் காணாமல் போய்விட்டதாகவும் கூறப்படுகிறது.
விமான விபத்தில் நேதாஜி இறந்திருக்கலாம் என்று கூறப்படுவதை, பலர் ஏற்கவில்லை. நேதாஜி குறித்த உண்மை தகவல்கள் அடங்கிய, 160 ரகசிய கோப்புகள் அரசிடம் உள்ளது. இந்த கோப்புகளை வெளியிட்டால் தான், நேதாஜியின் வாழ்க்கை குறித்து அனைவரும் அறிய இயலும். இந்நிலையில், கடந்த திங்கள் கிழமை இரவு, ஜெர்மனி தலைநகர் பெர்லினில், நேதாஜியின் கொள்ளுப் பேரனான சூர்யகுமார் போஸ், பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். அப்போது, நேதாஜியுடன் தொடர்புடைய அனைத்து ரகசிய கோப்புகளையும் உடனடியாக வெளியிடும்படி கோரினார். மேலும், நேதாஜியின் குடும்பத்தினரை, நேரு உளவு பார்த்ததாக வெளியான தகவல் அதிர்ச்சியளிப்பதாகக் கூறிய போஸ், அதுகுறித்த அறிக்கையையும் அளிக்கும்படி கேட்டுள்ளார். 

நேதாஜியின் வாழ்க்கையில் உள்ள உண்மைகளை அறிய ஆவலாக உள்ள, பிரதமர் மோடியும், சூர்யகுமார் போசின் கோரிக்கையை பரிசீலித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளார். அரசாங்க ரகசிய சட்டத்தை பரிசீலித்து, நேதாஜி குறித்த ரகசிய கோப்புகளை வெளியிடுவதற்கு, மத்திய அரசு ஒரு கமிட்டி அமைத்துள்ளது. இந்த கமிட்டியில், பிரதமர் அலுவலகம், ரா, ஐ.பி., உள்துறை அமைச்சக அதிகாரிகள் இடம் பெறுவர். இவர்கள், எந்தெந்த ஆவணங்களை வெளியிடலாம் என்பது குறித்து முடிவு செய்வர்.

Popular posts from this blog

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - செயல்முறைகள்

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - இயக்குனர் செயல்முறைகள்

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்