Skip to main content

நெட் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்


கலை அறிவியல் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர்களாக பணியாற்றுவதற்கான நெட் தேர்வு ஜூன் மாதம் நடக்க இருக்கிறது. இதையடுத்து இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என்று
சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது.



அரசு கலை அறிவியல் கல்லூரிகள், பல்கலைக் கழங்களில் உதவி பேராசிரியர்களாக பணியாற்ற வேண்டும் என்றால் நெட் தகுதித் தேர்வு எழுத வேண்டும். இதற்கான நெட் தேர்வு ஒவ்வொரு ஆண்டும் யுஜிசி நடத்தி வருகிறது. அப்படி நடத்தும் போது பல்கலைக் கழக அளவில் உள்ள கல்வி நிறுவனங்களை ஒருங்கிணைப்பாளராக நியமித்து அவர்கள் தேர்வு நடத்த வேண்டும் என்று யுஜிசி அறிவிக்கும். இதுவரை தமிழகத்தில் சென்னைப் பல்கலைக் கழகம், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகம், பாரதிதாசன் பல்கலைக் கழகம் உள்ளிட்டவை ஒருங்கிணைப்பாளராக இருந்து நெட் தேர்வுகளை நடத்தியுள்ளன.
இந்நிலையில் இந்த ஆண்டுக்கான நெட் தேர்வை சிபிஎஸ்இ நடத்த வேண்டும் என்று யுஜிசி உத்தரவிட்டுள்ளது.

இதையடுத்து சிபிஎஸ்இ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி நெட் தேர்வு ஜூன் மாதம் 28ம் தேதி நடக்கும் என்றும், இன்று முதல் விண்ணப்பிக்க வேண்டும் என்றும் சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது. பொருளாதாரம், அரசியல் அறிவியல், சமூகவியல், தமிழ், கன்னடம், மலையாளம், பஞ்சாபி உள்ளிட்ட 84 பாடத் தலைப்புகளில் இந்த தேர்வு நடத்தப்படுகிறது. 

முதுநிலை பட்டப் படிப்பில் 55 சதவீத மதிப்பெண் எடுத்தவர்கள் இந்த தேர்வு எழுத தகுதியுடைவர்கள். தேர்வுக்கு ஆன்லைன் மூலமே விண்ணப்பிக்க முடியும். நாளை முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்க தொடங்கி மே மாதம் 15ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது.

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு