Skip to main content

ராணுவ விமான இன்ஜின் தயாரிப்பில் புதிய தொழில்நுட்பம் : திண்டுக்கல் பேராசிரியருக்கு விருது


ராணுவ விமான இன்ஜின் தயாரிப்பில் புதிய தொழில்நுட்பம் கண்டறிந்த திண்டுக்கல் ஆர்.வி.எஸ்.,பொறியியல் கல்லூரி பேராசிரியர் எம்.ராஜ்குமாருக்கு இளம் விஞ்ஞானி விருது கிடைத்தது.

ராணுவ விமானங்களை வேகமாக இயக்கும்போது இன்ஜினில்
ஆயிரம் டிகிரிக்கு மேல் வெப்பம் அதிகரிக்கும். வெப்பத்தால் இன்ஜின் பாகங்கள் உருகி சேதமடைகின்றன. இதனால் அவற்றை அடிக்கடி மாற்ற வேண்டியுள்ளது. இதை தடுக்க இன்ஜின் பாகங்கள் தயாரிப்பில் 'இன்கோனல் 718,' 'டைட்டானியம் அலாய்' ஆகிய உலோக கலவையை பயன்படுத்த ஆராய்ச்சியாளர்கள் அறிவுறுத்தினர்.அந்த உலோக கலவையை சரியான அளவில் வெட்டி, வடிவமைப்பதில் சிக்கல் இருந்தது. அதனை சரியான அளவில் வெட்டுவதற்கு'சிலிக்கன் நைட்ரேட்'டால் ஆன 'செராமிக் கட்டிங் டூல்சை' திண்டுக்கல் ஆர்.வி.எஸ்.,பொறியியல் கல்லூரி மெக்கனிக்கல் இணைப்பேராசிரியர் எம்.ராஜ்குமார் கண்டறிந்தார். இதனை இந்திய ராணுவ ஆராய்ச்சி, மேம்பாட்டு கழகம் ஏற்றுக்கொண்டது.மேலும் அவர் இதுதொடர்பாக பெங்களூரு இந்திய ராணுவ விமான ஆராய்ச்சி மையத்தில் 2 மாதம் தங்கி ஆய்வு மேற்கொள்கிறார். இந்த புதிய கண்டுபிடிப்பிற்காக அவருக்கு தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மாநில மன்றம் 2014--15 க்கான இளம்விஞ்ஞானி விருதை அறிவித்துள்ளது. அவரை கல்லூரி தலைவர் குப்புச்சாமி, மேலாண்மை இயக்குனர் செந்தில்கணேஷ் பாராட்டினர்.தொடர்புக்கு: 99949 95722.

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு