Skip to main content

ராணுவ விமான இன்ஜின் தயாரிப்பில் புதிய தொழில்நுட்பம் : திண்டுக்கல் பேராசிரியருக்கு விருது


ராணுவ விமான இன்ஜின் தயாரிப்பில் புதிய தொழில்நுட்பம் கண்டறிந்த திண்டுக்கல் ஆர்.வி.எஸ்.,பொறியியல் கல்லூரி பேராசிரியர் எம்.ராஜ்குமாருக்கு இளம் விஞ்ஞானி விருது கிடைத்தது.

ராணுவ விமானங்களை வேகமாக இயக்கும்போது இன்ஜினில்
ஆயிரம் டிகிரிக்கு மேல் வெப்பம் அதிகரிக்கும். வெப்பத்தால் இன்ஜின் பாகங்கள் உருகி சேதமடைகின்றன. இதனால் அவற்றை அடிக்கடி மாற்ற வேண்டியுள்ளது. இதை தடுக்க இன்ஜின் பாகங்கள் தயாரிப்பில் 'இன்கோனல் 718,' 'டைட்டானியம் அலாய்' ஆகிய உலோக கலவையை பயன்படுத்த ஆராய்ச்சியாளர்கள் அறிவுறுத்தினர்.அந்த உலோக கலவையை சரியான அளவில் வெட்டி, வடிவமைப்பதில் சிக்கல் இருந்தது. அதனை சரியான அளவில் வெட்டுவதற்கு'சிலிக்கன் நைட்ரேட்'டால் ஆன 'செராமிக் கட்டிங் டூல்சை' திண்டுக்கல் ஆர்.வி.எஸ்.,பொறியியல் கல்லூரி மெக்கனிக்கல் இணைப்பேராசிரியர் எம்.ராஜ்குமார் கண்டறிந்தார். இதனை இந்திய ராணுவ ஆராய்ச்சி, மேம்பாட்டு கழகம் ஏற்றுக்கொண்டது.மேலும் அவர் இதுதொடர்பாக பெங்களூரு இந்திய ராணுவ விமான ஆராய்ச்சி மையத்தில் 2 மாதம் தங்கி ஆய்வு மேற்கொள்கிறார். இந்த புதிய கண்டுபிடிப்பிற்காக அவருக்கு தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மாநில மன்றம் 2014--15 க்கான இளம்விஞ்ஞானி விருதை அறிவித்துள்ளது. அவரை கல்லூரி தலைவர் குப்புச்சாமி, மேலாண்மை இயக்குனர் செந்தில்கணேஷ் பாராட்டினர்.தொடர்புக்கு: 99949 95722.

Popular posts from this blog

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

கணக்கெடுப்பு ! : பள்ளி செல்லா மாணவர்கள்...: ஏப்., 7ம் தேதி முதல் துவக்கம்

கடலூர் மாவட்டத்தில், அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு இடைநின்ற மாணவ, மாணவிகள் குறித்த விவரங்கள் கணக்கெடுக்கும் பணி வரும் 7ம் தேதி, துவங்குகிறது. தமிழகத்தில், ஆண்டுதோறும் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், 6 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு

10ம் வகுப்பு கணிதத்தேர்வில் போனஸ் மதிப்பெண்

பத்தாம் வகுப்பு தேர்விற்கான விடைத்தாள்கள் திருத்தும் பணி நடக்கிறது. பத்தாம் வகுப்பு கணிதத்தேர்வில், 'ஏ' பிரிவு ஒரு மதிப்பெண் வினாவிற்கான 15 வது கேள்வியில் ஆங்கில வழி வினா தவறாக கேட்கப்பட்டுள்ளதா