Skip to main content

இலவசக் கல்வித் திட்டம்: சென்னைப் பல்கலை. அறிவிப்பு


இலவசக் கல்வித் திட்டத்தின் கீழ் இணைப்புக் கல்லூரிகளில் சேர்ந்து படிக்க ஏழை மாணவர்களிடமிருந்து சென்னைப் பல்கலைக்கழகம் விண்ணப்பங்களை வரவேற்றுள்ளது.
இதுகுறித்து பல்கலைக்கழகம் வெளியிட்ட செய்தி:
பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பத்தைச் சேர்ந்த மா
ணவர்கள், இளநிலை பட்டப் படிப்புகளில் சேர்ந்து பயன்பெறும் வகையில் இலவச கல்வித் திட்டத்தை சென்னைப் பல்கலைக்கழகம் கடந்த 2010-11 கல்வியாண்டில் அறிமுகம் செய்தது.
இந்தத் திட்டத்தின் கீழ் பல்கலைக்கழகத்தில் இணைப்பு பெற்றுள்ள சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களிலுள்ள அரசு உதவிபெறும், சுயநிதி கலை, அறிவியல் கல்லூரிகளில் எந்தவித கட்டணமும் இன்றி மாணவர்கள் சேர்ந்து படிக்க முடியும்.
விண்ணப்பிக்கும் மாணவரின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ. 2 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
இதுதொடர்பான விவரங்கள், விண்ணப்பங்களை www.unom.ac.in என்ற பல்கலைக்கழக இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அல்லது பல்கலைக்கழக மக்கள் தொடர்பு அலுவலகத்தில் பெற்றுக் கொள்ளலாம்.
பூர்த்தி செய்த விண்ணப்பத்தை பிளஸ்-2 தேர்வு முடிவு அறிவிக்கப்பட்டதிலிருந்து 15 நாள்களுக்குள், பல்கலைக்கழக பதிவாளர் அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு