Skip to main content

இலவசக் கல்வித் திட்டம்: சென்னைப் பல்கலை. அறிவிப்பு


இலவசக் கல்வித் திட்டத்தின் கீழ் இணைப்புக் கல்லூரிகளில் சேர்ந்து படிக்க ஏழை மாணவர்களிடமிருந்து சென்னைப் பல்கலைக்கழகம் விண்ணப்பங்களை வரவேற்றுள்ளது.
இதுகுறித்து பல்கலைக்கழகம் வெளியிட்ட செய்தி:
பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பத்தைச் சேர்ந்த மா
ணவர்கள், இளநிலை பட்டப் படிப்புகளில் சேர்ந்து பயன்பெறும் வகையில் இலவச கல்வித் திட்டத்தை சென்னைப் பல்கலைக்கழகம் கடந்த 2010-11 கல்வியாண்டில் அறிமுகம் செய்தது.
இந்தத் திட்டத்தின் கீழ் பல்கலைக்கழகத்தில் இணைப்பு பெற்றுள்ள சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களிலுள்ள அரசு உதவிபெறும், சுயநிதி கலை, அறிவியல் கல்லூரிகளில் எந்தவித கட்டணமும் இன்றி மாணவர்கள் சேர்ந்து படிக்க முடியும்.
விண்ணப்பிக்கும் மாணவரின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ. 2 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
இதுதொடர்பான விவரங்கள், விண்ணப்பங்களை www.unom.ac.in என்ற பல்கலைக்கழக இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அல்லது பல்கலைக்கழக மக்கள் தொடர்பு அலுவலகத்தில் பெற்றுக் கொள்ளலாம்.
பூர்த்தி செய்த விண்ணப்பத்தை பிளஸ்-2 தேர்வு முடிவு அறிவிக்கப்பட்டதிலிருந்து 15 நாள்களுக்குள், பல்கலைக்கழக பதிவாளர் அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Popular posts from this blog

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

கணக்கெடுப்பு ! : பள்ளி செல்லா மாணவர்கள்...: ஏப்., 7ம் தேதி முதல் துவக்கம்

கடலூர் மாவட்டத்தில், அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு இடைநின்ற மாணவ, மாணவிகள் குறித்த விவரங்கள் கணக்கெடுக்கும் பணி வரும் 7ம் தேதி, துவங்குகிறது. தமிழகத்தில், ஆண்டுதோறும் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், 6 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு

10ம் வகுப்பு கணிதத்தேர்வில் போனஸ் மதிப்பெண்

பத்தாம் வகுப்பு தேர்விற்கான விடைத்தாள்கள் திருத்தும் பணி நடக்கிறது. பத்தாம் வகுப்பு கணிதத்தேர்வில், 'ஏ' பிரிவு ஒரு மதிப்பெண் வினாவிற்கான 15 வது கேள்வியில் ஆங்கில வழி வினா தவறாக கேட்கப்பட்டுள்ளதா