Skip to main content

நேரடி மானியத் திட்டத்தில் இணைந்தவர்கள் வங்கிக் கணக்கை மாற்ற முடியுமா?


சமையல் எரிவாயு உருளை நேரடி மானியத் திட்டத்தில் இணைந்த வாடிக்கையாளர்கள், தேவையெனில் தங்கள் வங்கிக் கணக்கை மாற்றிக்கொள்ள முடியும் என எண்ணெய் நிறுவன அதிகாரிகள் தெரி
வித்தனர்.
மத்திய அரசின் சமையல் எரிவாயு உருளை நேரடி மானியத் திட்டம் தமிழகம் உள்பட நாடு முழுவதும், கடந்த ஜனவரி 1-ஆம் தேதி அமல்படுத்தப்பட்டது.
வாடிக்கையாளர்கள் நேரடி மானியத் திட்டத்தில் இணைந்து மானியத் தொகை பெறுவதற்கு, ஆதார் அட்டை கட்டாயமில்லை. ஆனால், சமையல் எரிவாயு இணைப்பு உள்ள வாடிக்கையாளர் பெயரில் வங்கிக் கணக்கு இருப்பது அவசியம்.
தமிழகத்தைப் பொருத்தவரை 1.53 கோடி சமையல் எரிவாயு இணைப்புகள் உள்ளன. இவற்றில் தற்போதைய நிலவரப்படி, சுமார் 1.32 கோடிக்கும் (86 சதவீதம்) அதிகமான வாடிக்கையாளர்கள் நேரடி மானியத் திட்டத்தில் இணைந்துள்ளனர்.
அவர்களது வங்கிக் கணக்கில் நேரடி மானியத் தொகை செலுத்தப்பட்டு வருகிறது.
இது தவிர, சுமார் 18 லட்சத்துக்கும் அதிகமானோர் இன்னும் இந்தத் திட்டத்தில் இணையாமல் உள்ளனர்.
எப்படி இணைவது?
ஆதார் அட்டை இல்லாதவர்கள் சமையல் எரிவாயு புத்தகத்தின் முதல் பக்க நகல் (அல்லது) அண்மையில் பெற்ற சமையல் எரிவாயு உருளை தொகைக்கான ரசீது, வங்கிக் கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல் (ஐஊநஇ இர்க்ங் சர். உள்ளது) ஆகியவற்றை விண்ணப்ப படிவத்துடன் இணைத்துக் கொடுத்தால் போதுமானது.
ஆதார் அட்டை உள்ளவர்கள் எரிவாயு இணைப்பு யாருடைய பெயரில் இருக்கிறதோ அவரது ஆதார் அட்டையின் நகல், சமையல் எரிவாயு புத்தகத்தின் முதல் பக்க நகல் (அல்லது) அண்மையில் பெற்ற சமையல் எரிவாயு உருளைக்கான ரசீது, வங்கிக் கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல் ஆகியவற்றை விண்ணப்ப படிவத்துடன் இணைத்துக் கொடுக்க வேண்டும்.
வங்கிக் கணக்கை மாற்றலாம்
நேரடி மானியத் திட்டத்தில் இணைவதற்காக வங்கியில் ஏற்கெனவே சேமிப்பு கணக்கு உள்ளவர்கள், ஊதியத்துக்காக வங்கிக் கணக்கு வைத்துள்ளவர்கள், பிரதமரின் மக்கள் நிதி (ஜன் தன்) திட்ட வங்கிக் கணக்கு உள்ளவர்கள் தங்களது வங்கிக் கணக்கு எண்களைச் சமர்ப்பித்துள்ளனர்.
ஊதியத்துக்காக வங்கிக் கணக்கு வைத்துள்ளவர்கள் ஒரு நிறுவனத்திலிருந்து மற்றொரு நிறுவனத்துக்கு மாறும்போது வங்கிக் கணக்கை மாற்ற வேண்டிய சூழல் ஏற்படுகிறது.
இது தவிர, வங்கிக் கணக்கை முடித்துக்கொள்பவர்கள், வேறு வங்கிக்கு மாற நினைப்பவர்கள் நேரடி மானியத்துக்காக அளித்த வங்கிக் கணக்கை மாற்ற முடியுமா? என ஐயம் தெரிவித்தனர்.
ஆனால், வாடிக்கையாளர்கள் அனைவரும் தேவையெனில், தங்களது வங்கிக் கணக்கை மாற்றிக் கொள்ள முடியும் என எண்ணெய் நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர்.
எப்படி மாற்றுவது?
நேரடி மானியத் திட்ட வங்கிக் கணக்கை மாற்ற நினைக்கும் வாடிக்கையாளர்கள் தங்கள் விநியோகஸ்தரிடம் சென்று, எந்த வங்கிக் கணக்கில் மானியத் தொகையை பெற வேண்டுமோ அந்த வங்கிக் கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகலை (ஐஊநஇ இர்க்ங் சர். உள்ளது) சமர்பித்து மாற்றிக் கொள்ளலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஒரு முறை மட்டுமே அனுமதி
வங்கிக் கணக்கை மாற்ற நினைக்கும் வாடிக்கையாளர்களின் கோரிக்கையை விநியோகஸ்தர்களால் ஒரு முறை மட்டுமே நிறைவேற்ற முடியும்.
இரண்டாவது முறையாக வாடிக்கையாளர்கள் தங்கள் வங்கிக் கணக்கை மாற்ற நினைத்தால் சம்பந்தப்பட்ட எண்ணை நிறுவனங்களிடம் விண்ணப்பித்து, முறையான காரணங்கள் இருந்தால் மட்டுமே வாடிக்கையாளரின் வங்கிக் கணக்கு எண் மாற்றப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு