Skip to main content

ஆசிரியை, மாணவன் மாயமான சம்பவம்; சமூகவலைத்தளங்களில் பரப்பப்படும் பீதி

நெல்லையில் ஒரு பள்ளியில் பயின்ற மாணவனும், ஆசிரியையும் ஒரே நேரத்தில் காணாமல் போன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதோடு, அவர்களை குறித்து தவறான படங்களுடன் பேஸ்புக், வாட்ஸ்
அப்களில் பரப்பப்படும் படங்களால் மேலும் பீதி ஏற்பட்டுள்ளது.

திருநெல்வேலி, செங்கோட்டை, காலங்கரை பகுதியை சேர்ந்தவர் கேசரி. இவரது மகள் (வயது 24) எம்.எஸ்.சி.,பட்டதாரி. செங்கோட்டையை அடுத்துள்ள, இலத்தூரில் தனியார் மெட்ரிக் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றிவந்தார். பத்தாம் வகுப்பு தேர்வுகள் முடிந்த நாளில் பள்ளிக்கு சென்ற மகளை காணவில்லை என அவரது தந்தை கேசரி, செங்கோட்டை போலீசில் புகார் செய்தார். அதே பள்ளியில் பத்தாம் வகுப்பு பயின்ற மாணவன். கடையநல்லூர், கிருஷ்ணாபுரத்தை சேர்ந்தவன். பத்தாம் வகுப்பு தேர்வு முடிந்த தினத்தில் அந்த மாணவனையும் காணவில்லை என அவரது தாயார், கடையநல்லூர் போலீசில் புகார் செய்துள்ளார். இருவரும் காணாமல் போனது குறித்து செங்கோட்டை, கடையநல்லூர் போலீசார் 
விசாரித்துவருகின்றனர். மாணவன், வீட்டில் இருந்த ரொக்கப்பணம், நகைகளுடன் தலைமறைவாகியிருக்கலாம் என தெரிகிறது. ஒரே நேரத்தில் ஆசிரியையும், மாணவனும் கிளம்பிச்சென்றதால் இருவருக்கும் காதல் எனவும் ஒருவரை மற்றவர் கடத்திச்சென்றுவிட்டதாக பரபரப்பு எழுந்துள்ளது. ஆனால் இருவரும் சேர்ந்துசென்றதை யாரும் பார்த்ததாக தகவல் இல்லை.

வாட்ஸ்அப் படங்கள்: காணாமல் போன ஆசிரியை, மாணவன் ஆகியோரது படங்கள் போலீசாரிடம் உள்ளது.ஆனால் சமூகவலைத்தளங்களில் வெளியாகிய படங்களில் ஒரு மாணவன், ஒரு ஆசிரியையை, வகுப்பறையிலேயே தூக்கிவைத்திருப்பது போன்ற படங்கள் வெளியாகின. அந்த ஆசிரியையின் படங்களும் வெளியாகின. இந்த பரபரப்பு முடிவதற்குள், இன்று காலையில் இதே ஆசிரியை, மாணவன் குறித்து புதிய அதிர்ச்சியூட்டும் படங்கள் வெளியாகியுள்ளன.

மாணவன் காயத்துடன் சிகிச்சை பெறுவது போல ஒரு படமும், ஒரு இரும்பு பெட்டிக்குள் கால்கள் வெட்டப்பட்ட நிலையில் பிணமாக கிடப்பது போலவும் படங்கள் வெளியாகியுள்ளன. மேலும் ஆசிரியையும் நிர்வாண நிலையில் இரும்புபெட்டிக்குள் கொலை செய்யப்பட்டு கிடக்கும் படங்களும் வாட்ஸ்அப்களில் பரப்பப்படுகிறது. ஆனால் காணாமல் போன ஆசிரியை , மாணவன் இவர்கள் அல்ல என தெளிவாக தெரிகிறது. இருப்பினும் ஊர்வாயை மூட முடியாது என்பதைப்போல வாட்ஸ்அப்பிலும், பேஸ்புக்கில் தங்களுக்கு தெரிந்த கட்டுக்கதைகளை பரப்பிவிடுகின்றனர். இருவர் கொலை செய்யப்பட்டு கிடக்கும் படங்கள் அரியானா மாநிலம் சோனாபட் மாவட்டம், பகல்ஹர்த் நடந்த சம்பவத்திற்குரிய படங்கள் என தெரியவருகிறது. இருப்பினும் யாரோ மாணவன், யாரோ ஆசிரியை என்றால் சமூகவலைத்தளங்களில் இஷ்டத்திற்கும் பரப்புவது வழக்கமாகிவிட்டது.

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு