Skip to main content

ஆண்ட்ராய்டு செயலி எச்சரிக்கை!

ஸ்மார்ட் போன் செயலிகள் பயனுள்ளவைதான், சந்தேகமில்லை. ஆனால் அவற்றின் பயன்பாட்டில் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. ஏனெனில் பல செயலிகள் பயனாளிகள் பற்றிய தனிப்பட்ட தகவல்களைச் சேகரித்துக்கொண்டிருக்கின்றன. 
இது பற்றிய சமீபத்திய ஆய்வு கொஞ்சம் திடுக்கி
ட வைக்கிறது.அமெரிக்காவின் கார்னகி மெலான் பல்கலைக்கழக ஆய்வாளர்களால் நடத்தப்பட்ட அந்த ஆய்வு ஒரு சில ஆண்ட்ராய்டு செயலிகள் மூன்று நிமிடத்துக்கு ஒரு முறை பயனாளிகள் இருப்பிடம் பற்றிய விவரங்களைச் சேகரிப்பதாகத் தெரிவிக்கிறது.ஆண்ட்ராய்டு போனுக்கான அனுமதி நிர்வகிப்பு செயலி துணையுடன் நடத்தப்பட்ட இந்த ஆய்வு சராசரியாக இரண்டு வாரத்தில் 4,182 முறை பயனாளிகள் பற்றிய தகவல் சேகரிக்கப்படுவதாகத் தெரிவிக்கிறது.

அமெரிக்க ஆய்வுதான் என்றாலும் பரவலாக எல்லாப் பயனாளிகளுக்கும் பொருந்தும் என்று கருதலாம். பெரும்பாலும் இலவச செயலிகளில் தான் இந்தச் சிக்கல் என்கின்றனர்.ஸ்மார்ட் போனில் உள்ள பிளேஷ்லைட் செயலிகள் இவ்வாறு பயனாளிகளின் தகவலைச் சேகரிப்பதாகச் சொல்லப்படுகிறது. இவை பொதுவாக மார்க்கெட்டிங் நிறுவனங்களுக்கு விற்கப்பட்டாலும் சில நேரங்களில் ஹேக்கர்கள் கைவரிசை காட்டவும் இது போன்ற செயலிகள் மூலம் தகவல்களைக் களவாடலாம்.ஆக அடுத்த முறை இலவச செயலிகளை டவுன்லோடு செய்யும் போது அது எதற்கெல்லாம் அனுமதிகேட்கிறது எனக் கவனியுங்கள்.

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு