Skip to main content

லட்சுமி விலாஸ் வங்கியில் இளநிலை அதிகாரி பணி.

லட்சுமி விலாஸ் வங்கியில் நிரப்பப்பட உள்ள இளநிலை அதிகாரி பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

நிறுவனம்: லட்சுமி விலாஸ் வங்கி

பணி இடம்: 

தமிழ்நாடு மற்றும் இந்தியாவின் அனைத்து பகுதிகள்.

பணி: இளநிலை உதவியாளர்

தகுதி: 50 சதவிகித மதிப்பெண்களுடன் பட்டம் பெற்றிருக்க வேண்டும். கணினி குறித்த அறிவு பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் மதேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

தேர்வு மையம்: சென்னை, கோயமுத்தூர், சேலம், மதுரை, கரூர், பெங்களூர், புதுதில்லி, ஹைதராபாத், விசாகப்பட்டினம், மும்பை, கோல்கத்தா, ராஞ்சி, அகமதாபாத்,போபால்.

தேர்வு கட்டணம்: ரூ.600. இதனை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும்.

வயதுவரம்பு: 02.03.1988 - 01.03.1995 தேதியின்படி 27க்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: www.lvbank.com என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 25.04.2015ஆன்லைன் தேர்வு மே மாதம் நடைபெறும்.ஆன்லைன் தேர்வின்போது பாஸ்போர்ட், ஓட்டுநர் உரிமம், ஆதார் அட்டை போன்ற அசல் அடையாள சான்றிதழ்களை காட்ட வேண்டும்.

மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://www.lvbank.com/UserFiles/File/JO_Revt.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும். 

Popular posts from this blog

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

கணக்கெடுப்பு ! : பள்ளி செல்லா மாணவர்கள்...: ஏப்., 7ம் தேதி முதல் துவக்கம்

கடலூர் மாவட்டத்தில், அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு இடைநின்ற மாணவ, மாணவிகள் குறித்த விவரங்கள் கணக்கெடுக்கும் பணி வரும் 7ம் தேதி, துவங்குகிறது. தமிழகத்தில், ஆண்டுதோறும் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், 6 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு

10ம் வகுப்பு கணிதத்தேர்வில் போனஸ் மதிப்பெண்

பத்தாம் வகுப்பு தேர்விற்கான விடைத்தாள்கள் திருத்தும் பணி நடக்கிறது. பத்தாம் வகுப்பு கணிதத்தேர்வில், 'ஏ' பிரிவு ஒரு மதிப்பெண் வினாவிற்கான 15 வது கேள்வியில் ஆங்கில வழி வினா தவறாக கேட்கப்பட்டுள்ளதா