Skip to main content

காந்திகிராம கிராமியப் பல்கலையில் முதன்முறையாக ஆன்-லைன் விண்ணப்பம்


காந்திகிராம கிராமியப் பல்கலைக்கழகத்தில் நிகழாண்டு முதல் ஆன்-லைனில் விண்ணப்பிக்கும் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு முதல்முறையாக
பாடப் பிரிவுக்கு தலா 4 இடங்கள் ஒதுக்கப்படுகின்றன.
  இது தொடர்பாக, துணைவேந்தர் சு. நடராஜன் தெரிவித்தது: காந்திகிராம கிராமியப் பல்கலைக்கழகத்தில், திண்டுக்கல் மற்றும் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமின்றி, கேரளம், வடகிழக்கு மாநிலங்கள், வெளிநாடுகளைச் சேர்ந்த மாணவர்களும் பயின்று வருகின்றனர்.    இங்கு நேரில் வந்து விண்ணப்பங்களை பெறுவதால், வெளியிடங்களைச் சேர்ந்த மாணவர்கள் சிரமம் அடைகின்றனர். இதனைத் தவிர்க்கும் வகையிலும், மாணவர் சேர்க்கையை நவீனப்படுத்தும் நோக்கிலும், 2015-16 கல்வி ஆண்டு முதல் ஆன்-லைனில் விண்ணப்பிக்கும் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.   அதன்படி, படிவத்துக்கான கட்டணத்தை வங்கி மூலம் செலுத்தினால் மட்டுமே விண்ணப்பத்தின் எண்ணை பெறமுடியும். இந்த முறையில் விண்ணப்பிக்கும்போது, புகைப்படம், சான்றிதழ் ஆகியவற்றை இணைக்கத் தேவையில்லை.
  மேலும், முதுகலைப் பாடப் பிரிவுக்கான நுழைவுத் தேர்வும் ஆன்-லைன் மூலமே நடத்தப்படுகிறது. பொறியியல் கல்லூரிகளுக்கு நடத்தப்படும் ஒற்றைச்சாளர முறையை பின்பற்றி, இனிவரும் நாள்களில் மாணவர் சேர்க்கை நடைபெறும்.
  இந்நிலையில், திண்டுக்கல் பகுதியைச் சேர்ந்த மாணவர்கள் இங்கு நேரடியாக வந்தாலும், பல்கலைக்கழக வளாகத்தில் ஆன்-லைனில் விண்ணப்பிப்பதற்காக கணினி வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.   மேலும், பல்கலைக்கழக மானியக் குழுவின் பரிந்துரையின்பேரில், முதல்முறையாக ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு, ஒவ்வொரு பாடப் பிரிவிலும் 4 இடங்கள் ஒதுக்கப்படுகின்றன.
  இது தொடர்பான கூடுதல் விவரங்கள் பெற 0451-2452372 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்றார் அவர்.

Popular posts from this blog

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

ஆசிரியர் இல்லாமல் நாம் இல்லை!-முனைவர் மா.தச.பூர்ணாச்சாரி,வழக்கறிஞர், மதுரை.94432 66674.

ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் பள்ளிப்பருவம் முக்கியமானது. முதன் முதலாக தாய் தந்தையுடன் சென்று, புத்தாடை அணிந்து, ஆசிரியரை வணங்கி, புத்தரிசி அல்லது நெல்லில் எழுத்தை எழுதத் துவங்கிய நாளை மறக்க இயலாது.வெளி உலகைப் புரிந்து கொள்ளவும், தாய் தந்தையரால் தர முடியாத கல்வி மற்றும் பயிற்சியினை கல்வி மூலமாக ஆசிரியரால்