Skip to main content

காந்திகிராம கிராமியப் பல்கலையில் முதன்முறையாக ஆன்-லைன் விண்ணப்பம்


காந்திகிராம கிராமியப் பல்கலைக்கழகத்தில் நிகழாண்டு முதல் ஆன்-லைனில் விண்ணப்பிக்கும் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு முதல்முறையாக
பாடப் பிரிவுக்கு தலா 4 இடங்கள் ஒதுக்கப்படுகின்றன.
  இது தொடர்பாக, துணைவேந்தர் சு. நடராஜன் தெரிவித்தது: காந்திகிராம கிராமியப் பல்கலைக்கழகத்தில், திண்டுக்கல் மற்றும் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமின்றி, கேரளம், வடகிழக்கு மாநிலங்கள், வெளிநாடுகளைச் சேர்ந்த மாணவர்களும் பயின்று வருகின்றனர்.    இங்கு நேரில் வந்து விண்ணப்பங்களை பெறுவதால், வெளியிடங்களைச் சேர்ந்த மாணவர்கள் சிரமம் அடைகின்றனர். இதனைத் தவிர்க்கும் வகையிலும், மாணவர் சேர்க்கையை நவீனப்படுத்தும் நோக்கிலும், 2015-16 கல்வி ஆண்டு முதல் ஆன்-லைனில் விண்ணப்பிக்கும் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.   அதன்படி, படிவத்துக்கான கட்டணத்தை வங்கி மூலம் செலுத்தினால் மட்டுமே விண்ணப்பத்தின் எண்ணை பெறமுடியும். இந்த முறையில் விண்ணப்பிக்கும்போது, புகைப்படம், சான்றிதழ் ஆகியவற்றை இணைக்கத் தேவையில்லை.
  மேலும், முதுகலைப் பாடப் பிரிவுக்கான நுழைவுத் தேர்வும் ஆன்-லைன் மூலமே நடத்தப்படுகிறது. பொறியியல் கல்லூரிகளுக்கு நடத்தப்படும் ஒற்றைச்சாளர முறையை பின்பற்றி, இனிவரும் நாள்களில் மாணவர் சேர்க்கை நடைபெறும்.
  இந்நிலையில், திண்டுக்கல் பகுதியைச் சேர்ந்த மாணவர்கள் இங்கு நேரடியாக வந்தாலும், பல்கலைக்கழக வளாகத்தில் ஆன்-லைனில் விண்ணப்பிப்பதற்காக கணினி வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.   மேலும், பல்கலைக்கழக மானியக் குழுவின் பரிந்துரையின்பேரில், முதல்முறையாக ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு, ஒவ்வொரு பாடப் பிரிவிலும் 4 இடங்கள் ஒதுக்கப்படுகின்றன.
  இது தொடர்பான கூடுதல் விவரங்கள் பெற 0451-2452372 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்றார் அவர்.

Popular posts from this blog

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

கணக்கெடுப்பு ! : பள்ளி செல்லா மாணவர்கள்...: ஏப்., 7ம் தேதி முதல் துவக்கம்

கடலூர் மாவட்டத்தில், அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு இடைநின்ற மாணவ, மாணவிகள் குறித்த விவரங்கள் கணக்கெடுக்கும் பணி வரும் 7ம் தேதி, துவங்குகிறது. தமிழகத்தில், ஆண்டுதோறும் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், 6 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு

10ம் வகுப்பு கணிதத்தேர்வில் போனஸ் மதிப்பெண்

பத்தாம் வகுப்பு தேர்விற்கான விடைத்தாள்கள் திருத்தும் பணி நடக்கிறது. பத்தாம் வகுப்பு கணிதத்தேர்வில், 'ஏ' பிரிவு ஒரு மதிப்பெண் வினாவிற்கான 15 வது கேள்வியில் ஆங்கில வழி வினா தவறாக கேட்கப்பட்டுள்ளதா