Skip to main content

தள்ளுபடி விலை பொருள் வாங்குகிறீர்களா? :மாநில நுகர்வோர் நீதிமன்றம் 'அட்வைஸ்'


'தள்ளுபடி விலையில், பொருட்கள் வாங்கும் வாடிக்கையாளர்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்' என, தமிழ்நாடு நுகர்வோர் நீதிமன்றம், 'அட்வைஸ்' வழங்கிஉள்ளது.

கோவை, பி.எம்.காலனியை சேர்ந்த ஜெயராமன், 50, கோவை நு
கர்வோர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு:கோவை, மருதமலை, முதன்மை சாலையில் உள்ள தனியார் மருந்து கடையில், 2012 நவ., 4ம் தேதி, இருமல் மருந்து மற்றும் மாத்திரைகளை, 90 ரூபாய் கொடுத்து வாங்கினேன். மருந்து விற்பனை கடை விளம்பரத்தில், 'இங்கு வாங்கும் மருந்து பொருட்களுக்கு, 18 சதவீதம் விலை தள்ளுபடி செய்யப்படும்' என, கூறியதால் தான் வாங்கினேன். ஆனால், 5 சதவீதம் மட்டுமே தள்ளுபடி வழங்கப்பட்டது. நான் ஏமாற்றப்பட்டு விட்டேன். 20 ஆயிரம் ரூபாய் நஷ்டஈடு வழங்க வேண்டும்.இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது.இந்த வழக்கில், மருந்து விற்பனை கடைக்காரர் மூலம் தாக்கல் செய்த பதில் மனு:மருந்து பொருட்கள் விற்பனையில் போட்டி அதிகம் உள்ளது. இதை சமாளிக்க, சில பொருட்களுக்கு விலை சலுகை வழங்குவது வழக்கம். விளம்பரத்தில், '18 சதவீதம் வரை தள்ளுபடி சலுகை வழங்கப்படும்' என தான் குறிப்பிட்டிருந்தோம். இதன்படி வாடிக்கையாளர் வாங்கிய மருந்து பொருட்களுக்கு உரிய தள்ளுபடி சலுகை அளிக்கப்பட்டுள்ளது. விற்பனையில், நாங்கள் தவறு ஏதும் செய்யவில்லை.இவ்வாறு, பதில் மனுவில் கூறப்பட்டுஉள்ளது.மாவட்ட நுகர்வோர் நீதிமன்ற நீதிபதி, மருந்து விற்பனை நிறுவனம் மீது தவறில்லை எனக்கூறி, ஜெயராமன் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பித்தார். சென்னையில் உள்ள, தமிழ்நாடு நுகர்வோர் நீதிமன்றத்தில், ஜெயராமன் மேல்முறையீடு செய்தார்.
இதில், நீதி பிரிவு உறுப்பினர் அண்ணாமலை, உறுப்பினர் பாக்கியவதி இடம் பெற்ற, 'பெஞ்ச்' அளித்த உத்தரவு:விளம்பரத்தில், 'மருந்து பொருட்களுக்கு, 18 சதவீதம் வரை தள்ளுபடி வழங்கப்படும்' என, தான் தெரிவிக்கப்பட்டிருந்தது. '18 சதவீதம் தள்ளுபடி சலுகை வழங்கப்படும்' என, கூறவில்லை என்பதற்கான ஆதாரங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. விற்பனையில், கடைக்காரர் தவறு செய்யவில்லை என, தெரிய வந்து உள்ளது. மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பு சரியானதே. மேல் முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. விளம்பரத்தை பார்த்து தள்ளுபடி விலையில் பொருட்கள் வாங்க விரும்பும் வாடிக்கையாளர்கள், விளம்பரத்தில் கூறப்பட்டுள்ள விவரங்களை முழுவதுமாக தெரிந்து கொண்ட பிறகே பொருட்களை வாங்க வேண்டும். தள்ளுபடி விலையில் பொருட்கள் வாங்குபவர்கள், விழிப்புணர்வுடன் இருப்பது அவசியம்.இவ்வாறு, உத்தரவிடப்பட்டது.

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு