Skip to main content

ஜூலையில் பொறியியல் கவுன்சிலிங்:துணைவேந்தர் ராஜாராம் தகவல்


''அண்ணா பல்கலையுடன் இணைந்த, பொறியியல் கல்லுாரிகளில் சேர்வதற்கான விண்ணப்பங்கள், மே மாதம் வழங்கப்படும்; ஜூலையில் கவுன்சிலிங் நடத்தப்படும்,'' என, அண்ணா பல்கலை துணைவேந்தர் ரா
ஜாராம் தெரிவித்து உள்ளார்.அண்ணா பல்கலையின் நேரடிக் கட்டுப்பாட்டில், 16 பொறியியல் கல்வி நிறுவனங்கள் உள்ளன.

இதுதவிர, 593 அரசு உதவிபெறும், சிறுபான்மை மற்றும் சுயநிதி பொறியியல் கல்லுாரிகளில், மொத்தம், 2.5 லட்சம் இடங்கள் உள்ளன.இந்த இடங்களின் அரசு ஒதுக்கீட்டு மாணவர் சேர்க்கை, ஒற்றை சாளர முறையில், அண்ணா பல்கலை மூலம் நடத்தப்படுகிறது.இதற்கான விண்ணப்பங்கள், பிளஸ் 2 தேர்வு முடிவு வருவதற்கு ஒரு வாரம் முன் வினியோகிக்கப்படும். இந்த ஆண்டு பிளஸ் 2 தேர்வு முடிவு, மே முதல் வாரத்தில் வெளியாகும் என, தெரியவந்துள்ளது.

இந்நிலையில், அண்ணா பல்கலை துணைவேந்தர் ராஜாராம் கூறியதாவது:மருத்துவம் உள்ளிட்ட பல படிப்புகளுக்கு, தேர்வுகள் மற்றும் கவுன்சிலிங் நடக்கிறது. இதை கருத்தில் கொண்டு, அண்ணா பல்கலையின் பொறியியல் விண்ணப்பங்கள், மே முதல் வாரத்திற்குள் வினியோகம் செய்யப்படும். பின், மாணவர் சேர்க்கைக்கான கவுன்சிலிங், ஜூலையில் நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது; இதன் தேதி விவரங்களை, தமிழக அரசு வெளியிடும்.

அண்ணா பல்கலையின் கட்டுப்பாட்டில் உள்ள பொறியியல் கல்லுாரிகளில், எத்தனை கல்லுாரிகளுக்கு இணைப்பு அங்கீகாரம் வழங்கப்படும்; எத்தனை கல்லுாரிகளில் எத்தனை படிப்புகள் உள்ளன; புதிய படிப்புகள் போன்ற விவரங்கள், அகில இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் கவுன்சிலான ஏ.ஐ.சி.டி.இ.,யின் அங்கீகார அறிவிப்பு வந்ததும் வெளியிடப்படும்.இவ்வாறு, அவர் கூறினார்

Popular posts from this blog

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

ஆசிரியர் இல்லாமல் நாம் இல்லை!-முனைவர் மா.தச.பூர்ணாச்சாரி,வழக்கறிஞர், மதுரை.94432 66674.

ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் பள்ளிப்பருவம் முக்கியமானது. முதன் முதலாக தாய் தந்தையுடன் சென்று, புத்தாடை அணிந்து, ஆசிரியரை வணங்கி, புத்தரிசி அல்லது நெல்லில் எழுத்தை எழுதத் துவங்கிய நாளை மறக்க இயலாது.வெளி உலகைப் புரிந்து கொள்ளவும், தாய் தந்தையரால் தர முடியாத கல்வி மற்றும் பயிற்சியினை கல்வி மூலமாக ஆசிரியரால்