Skip to main content

காமராஜர் பல்கலை. தொலைநிலைக் கல்வி இயக்ககத் தேர்வுத் தேதிகள் அறிவிப்பு

மதுரை காமராஜர் பல்கலைக்கழக தொலைநிலைக் கல்வி இயக்ககத் தேர்வுத் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.தொலைநிலைக் கல்வி இயக்கக மாணவர்களுக்காக மே மாதம் நடைபெறவிருக்கும் இளங்கலை, முதுகலை, எம்.பி.ஏ., எம்.சி.ஏ., சான்றிதழ் படிப்பு, பட்டயப் படிப்பு,முதுகலை பட்
டயப் படிப்பு, திறந்த வெளி தொடக்கநிலை மற்றும் அடிப்படை நிலைப் படிப்புகள் மற்றும் பி.எட், தேர்வுகளுக்கான பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சமர்ப்பிக்கும் இறுதித் தேதிகளும் மற்றும் தேர்வுகள் தொடங்கும் தேதிகளும் முடிவு செய்யப்பட்டுள்ளன.
இளங்கலை பட்டப்படிப்புகள் (13இ பதிவெண் வரை) மற்றும் பி.எட் (15 அ பதிவெண் வரை) விண்ணப்பங்களை அபராதமின்றி ஏப்ரல் 21 ஆம் தேதியும், ரூ.100 அபராதத்துடன் ஏப்ரல் 28 ஆம் தேதியும் சமர்ப்பிக்கலாம். தேர்வுகள் மே 16 ஆம் தேதி தொடங்குகிறது.முதுகலை மற்றும் தொழிற்சார் பட்டப்படிப்புகள் முதலாம் ஆண்டு (13இ பதிவெண்வரை) விண்ணப்பங்களை அபராதமின்றி 21 ஆம் தேதியும், ரூ.100 அபராதத்துடன்28 ஆம் தேதியும் சமர்பிக்கலாம். தேர்வுகள் மே 23 ஆம் தேதி தொடங்குகிறது.எம்.பி.ஏ, எம்.சி.ஏ., சான்றிதழ் படிப்பு, பட்டயப்படிப்பு, முதுகலை பட்டயப்படிப்பு, திறந்தவெளி தொடக்கநிலை மற்றும் அடிப்படை நிலை பட்டப்படிப்புகள் (13இ பதிவெண் வரை) விண்ணப்பங்களை ஏப்ரல் 27 ஆம் தேதியும், ரூ.100 அபராதத்துடன் மே 4 ஆம் தேதியும் சமர்பிக்கலாம். தேர்வுகள் மே 27 ஆம் தேதி தொடங்குகிறது.

14அ, 14இ, 15அ (பி.எட் நீங்கலாக) பதிவெண் கொண்ட மாணவர்களின் அல்பருவப் படிப்புகளுக்கான தேர்வுகள் சம்பந்தப்பட்ட அனைத்துத் தகவல்களும் பின்னர் தெரிவிக்கப்படும். தனித்தேர்வர்கள் தேர்வு விண்ணப்பங்களை ஜ்ஜ்ஜ்.ம்ந்ன்க்க்ங்.ர்ழ்ஞ் என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.அஞ்சல் மூலம் பெற விரும்புவோர் கூடுதல் தேர்வாணையர் முகவரிக்கு விண்ணப்பித்து பெற்றுக்கொள்ளலாம்.தொலைநிலைக் கல்வி இயக்ககத்தில் அனைத்து முதுகலை பட்டப்படிப்புகள் மற்றும் எம்.பி.ஏ., எம்.சி.ஏ பட்டப்படிப்புகள் பயிலும் மாணவர்கள் தேர்வுக்கு முன்னர் தேர்வு நுழைவுச்சீட்டு மற்றும் தேர்வுக்கால அட்டவணையை ஜ்ஜ்ஜ்.ம்ந்ன்க்க்ங்.ர்ழ்ஞ் என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். 

இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்யப்பட்ட தேர்வு நுழைவுச்சீட்டில்பாஸ்போர்ட் அளவு புகைப்படத்தை ஒட்டி அதிகாரியின் சான்றொப்பம் பெற்று தேர்வுமையத்திற்கு எடுத்துச் செல்லவும். நுழைவுச்சீட்டுடன் மாணவர்கள் தங்களது சேர்க்கை அனுமதி அட்டை, பாஸ்போர்ட், ஓட்டுநர் உரிமம் அல்லது மத்திய மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட அடையாள அட்டையுடன் சேர்த்து எடுத்துச் சென்று தேர்வு எழுதலாம் என்று கூடுதல் தேர்வாணையர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டது. 

Popular posts from this blog

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

கணக்கெடுப்பு ! : பள்ளி செல்லா மாணவர்கள்...: ஏப்., 7ம் தேதி முதல் துவக்கம்

கடலூர் மாவட்டத்தில், அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு இடைநின்ற மாணவ, மாணவிகள் குறித்த விவரங்கள் கணக்கெடுக்கும் பணி வரும் 7ம் தேதி, துவங்குகிறது. தமிழகத்தில், ஆண்டுதோறும் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், 6 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு

10ம் வகுப்பு கணிதத்தேர்வில் போனஸ் மதிப்பெண்

பத்தாம் வகுப்பு தேர்விற்கான விடைத்தாள்கள் திருத்தும் பணி நடக்கிறது. பத்தாம் வகுப்பு கணிதத்தேர்வில், 'ஏ' பிரிவு ஒரு மதிப்பெண் வினாவிற்கான 15 வது கேள்வியில் ஆங்கில வழி வினா தவறாக கேட்கப்பட்டுள்ளதா