Skip to main content

அண்ணா பல்கலையில் மாணவருக்கு ஒரு மரம் நடும் திட்டம்


நாடு முழுவதும் சுற்றுச்சூழலை பாதுகாக்கவும், மரங்களை வளர்த்து பசுமையை ஏற்படுத்தவும், உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. இதையொட்டி கல்லூரிகளில், அதிக அளவில் மரங்கள் நட உத்த
ரவிடப்பட்டு உள்ளது.

இதுகுறித்து, பசுமைத் தீர்ப்பாயம் சார்பில், பல்கலை மானியக்குழுவான யு.ஜி.சி.,க்கு கடிதம் எழுதப்பட்டு உள்ளது. அதில், ஒவ்வொரு கல்லூரியிலும் மரம் வளர்க்கும் திட்டம் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு பாடத்திட்டம் கட்டாயம் கொண்டு வர பரிந்துரைக்கப்பட்டு உள்ளது. இதன்படி, இந்தியாவிலுள்ள அனைத்து பொறியியல், மருத்துவம் உள்ளிட்ட, 706 பல்கலைகளின் துணைவேந்தர்களுக்கு, யு.ஜி.சி.,யிலிருந்து உத்தரவு ஒன்று வந்துள்ளது. தமிழகத்தில், அண்ணா, சென்னை, டாக்டர் எம்.ஜி.ஆர்., மருத்துவம், காமராஜர், பாரதிதாசன், அண்ணாமலை, மீன்வளம், தஞ்சை தமிழ்ப் பல்கலை உள்ளிட்ட, 51 பல்கலைகளின் உறுப்புக் கல்லூரிகளில், 'ஒரு மாணவருக்கு, ஒரு மரம்' என்ற பசுமை திட்டம் நிறைவேற்ற உத்தரவிடப்பட்டு உள்ளது.


இதுகுறித்து, அண்ணா பல்கலை அதிகாரி ஒருவர் கூறியதாவது: வரும் கல்வியாண்டில் மாணவர்களுக்கு, கல்லூரிகள் சார்பில், இலவச மரக்கன்றுகள் அளித்து, அதை கல்லூரிகளில் நட்டு, தாங்கள் படிக்கும் வரை பராமரிக்க உத்தரவிடப்படும். மேலும், கல்லூரிகளில், பசுமை குறித்த பாடத்திட்டம் ஒன்றும் இணைப்படும். இவ்வாறு, அவர் கூறினார்.

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு