Skip to main content

ஆதார் எண்ணை வங்கிக் கணக்குடன் இணையுங்கள்: ஓய்வூதியதாரர்களுக்கு அறிவுறுத்தல்

ஆதார் எண்ணை வங்கிக் கணக்குடன் இணையுங்கள்: ஓய்வூதியதாரர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்
மத்திய அரசிடம் இருந்து ஓய்வூதியம் பெறும் முன்னாள் அரசு ஊழியர்கள் மற்றும் அவர்களின் இறப்புக்கு பின்னர் குடும்ப ஓய்வூதியம் பெறும் வாரிசுகள் தங்களது ஆதார் எண்ணை வங்கிக் கணக்குடன் இணைக்க வேண்
டும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மத்திய அரசில் பணியாற்றி ஓய்வு பெற்ற 50 லட்சத்துக்கும் மேற்பட்டோர் ஓய்வூதியம் பெற்று வருகிறார்கள். இவர்கள் அனைவரும் தங்களது ஆதார் எண்ணை வங்கிக் கணக்குடன் இணைத்து, இது தொடர்பான தகவலை ஓய்வூதியம் மற்றும் பொதுமக்கள் குறைதீர்ப்பு துறை அதிகாரிகளுக்கு தெரியப்படுத்த வேண்டும் என மத்திய அரசு இன்று அறிவுறுத்தியுள்ளது.

மேலும், இதுவரை ஆதார் எண்ணுக்கு பதிவு செய்து கொள்ளாத ஓய்வூதியதாரர்களும், அவர்களின் குடும்ப உறுப்பினர்களும், குடும்ப ஓய்வூதியம் பெறும் நபர்களும் தங்களது பெயர்களை பதிவு செய்து கொள்ளும்படியும் கூறப்பட்டுள்ளது. ஓய்வூதியதாரர்களுக்கு இடையூறு இல்லாமல் பணம் சென்றடைவதை உறுதிபடுத்தவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக ஓய்வூதியம் மற்றும் பொதுமக்கள் குறைதீர்ப்பு துறை அமைச்சகம் இன்று வெளியிட்ட செய்தி குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வரும் நவம்பர் மாதம் தாங்கள் உயிருடன் இருப்பதற்கான ‘ஜீவன் பிரமான்’ டிஜிட்டல் உயிர்வாழ் சான்றிதழை சமர்ப்பிப்பதற்குள் இந்த நடைமுறைகளை பூர்த்தி செய்வது கட்டாயம் ஆக்கப்படும் என தெரிகிறது.  

Popular posts from this blog

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

முன்னுதாரணமாக விளங்கும் வடமணப்பாக்கம் அரசு தொடக்கப் பள்ளி

எண்ம முறையில் பாடம் கற்றல், குழந்தைகள் நூல்கள் வாசித்தல், கணினிபயிற்சி பெறுதல், அறிவியல் ஆய்வகம் என பல சிறப்பு அம்சங்களுடன் சுகாதாரம், ஒழுக்கம் ஆகியவற்றுடன் சேர்ந்து கல்வி கற்பிக்கப்படுகிறது.