டான்செட் நுழைவுத் தேர்வுக்கான ஆன்லைன் முறையில் விண்ணப்பப்பதிவு சேலம் அரசு பொறியியல் கல்லூரியில் தொடங்கியது. சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்கள் இம்மையத்தில் டான்செட் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உரிய சான்றிதழ்கள், புகைப்படம், விண்ணப்பக் கட்டணம் உள்ளிட்டவற்றுடன் வரும் மாணவர்களுக்கு ஆன்லைனில் விண்ணப்பித்து தேர்வுக்கான நுழைவுச் சீட்டு உடனடியாக வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் கல்லூரிகள், உயர்கல்வி நிறுவனங்களில் எம்.சி.ஏ., எம்.பி.ஏ., போன்ற படிப்புகளில் சேருவதற்கு டான்செட் நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது.