Skip to main content

நர்சு பணிக்கு 7,000 பேர் தேர்வு:ஆன்-லைனில் விண்ணப்பிக்கலாம்


அரசு மருத்துவமனைகளுக்கு, கூடுதலாக நர்சுகள் தேவைப்படும் நிலையில், புதிதாக, 7,243 பேரை சேர்க்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான, தகுதித் தேர்வு, ஜூன் மாதம் நடக்கிறது. 

'தமிழக மருத்துவத்துறையில் போதிய அளவில் டாக்டர்கள், நர்சுக
ள் மற்றும் மருத்துவம் சார் பணியாளர்கள் இல்லை' என்ற, குற்றச்சாட்டு கூறப்படுகிறது. அதனால், மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் மூலம், புதிதாத டாக்டர்கள் மற்றும் சிறப்பு பிரிவு டாக்டர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.

இதன்படி, 2,176 டாக்டர்கள், 400க்கும் மேற்பட்ட சிறப்பு பிரிவு டாக்டர்களுக்கு, கலந்தாய்வு மூலம் பணி ஆணை வழங்கப்பட்டுள்ளது. இவர்கள், பணியில் சேர்ந்து வருகின்றனர். டாக்டர்களை தொடர்ந்து, 7,243 நர்சுகளை பணியில் சேர்க்க அரசு முடிவு செய்துள்ளது. இதில், 451 பேர் ஆண்கள்.மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் மூலம், இந்த நர்சுகள் சேர்க்கப்பட உள்ளனர். இதற்கான முறையான அறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளது.

'மே மாதம், 11ம் தேதிக்குள், ஆன்-லைன் வழியில் விண்ணப்பிக்கலாம். இதற்கான எழுத்து தேர்வு, ஜூன், 28ல் நடக்க உள்ளது. மேலும் விவரங்கள் தேவைப்படுவோர், www.mrb.tn.gov.in என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்' என, மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. இதன்பின், மருந்தாளுனர், மருத்துவ உதவியாளர் என, மருத்துவம் சார் பணியாளர்களையும் எடுக்கவும் அரசு திட்டமிட்டுள்ளது.

Popular posts from this blog

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

கணக்கெடுப்பு ! : பள்ளி செல்லா மாணவர்கள்...: ஏப்., 7ம் தேதி முதல் துவக்கம்

கடலூர் மாவட்டத்தில், அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு இடைநின்ற மாணவ, மாணவிகள் குறித்த விவரங்கள் கணக்கெடுக்கும் பணி வரும் 7ம் தேதி, துவங்குகிறது. தமிழகத்தில், ஆண்டுதோறும் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், 6 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு

10ம் வகுப்பு கணிதத்தேர்வில் போனஸ் மதிப்பெண்

பத்தாம் வகுப்பு தேர்விற்கான விடைத்தாள்கள் திருத்தும் பணி நடக்கிறது. பத்தாம் வகுப்பு கணிதத்தேர்வில், 'ஏ' பிரிவு ஒரு மதிப்பெண் வினாவிற்கான 15 வது கேள்வியில் ஆங்கில வழி வினா தவறாக கேட்கப்பட்டுள்ளதா