Skip to main content

நர்சு பணிக்கு 7,000 பேர் தேர்வு:ஆன்-லைனில் விண்ணப்பிக்கலாம்


அரசு மருத்துவமனைகளுக்கு, கூடுதலாக நர்சுகள் தேவைப்படும் நிலையில், புதிதாக, 7,243 பேரை சேர்க்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான, தகுதித் தேர்வு, ஜூன் மாதம் நடக்கிறது. 

'தமிழக மருத்துவத்துறையில் போதிய அளவில் டாக்டர்கள், நர்சுக
ள் மற்றும் மருத்துவம் சார் பணியாளர்கள் இல்லை' என்ற, குற்றச்சாட்டு கூறப்படுகிறது. அதனால், மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் மூலம், புதிதாத டாக்டர்கள் மற்றும் சிறப்பு பிரிவு டாக்டர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.

இதன்படி, 2,176 டாக்டர்கள், 400க்கும் மேற்பட்ட சிறப்பு பிரிவு டாக்டர்களுக்கு, கலந்தாய்வு மூலம் பணி ஆணை வழங்கப்பட்டுள்ளது. இவர்கள், பணியில் சேர்ந்து வருகின்றனர். டாக்டர்களை தொடர்ந்து, 7,243 நர்சுகளை பணியில் சேர்க்க அரசு முடிவு செய்துள்ளது. இதில், 451 பேர் ஆண்கள்.மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் மூலம், இந்த நர்சுகள் சேர்க்கப்பட உள்ளனர். இதற்கான முறையான அறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளது.

'மே மாதம், 11ம் தேதிக்குள், ஆன்-லைன் வழியில் விண்ணப்பிக்கலாம். இதற்கான எழுத்து தேர்வு, ஜூன், 28ல் நடக்க உள்ளது. மேலும் விவரங்கள் தேவைப்படுவோர், www.mrb.tn.gov.in என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்' என, மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. இதன்பின், மருந்தாளுனர், மருத்துவ உதவியாளர் என, மருத்துவம் சார் பணியாளர்களையும் எடுக்கவும் அரசு திட்டமிட்டுள்ளது.

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்