Skip to main content

மே 7ல் பிளஸ் 2; மே 21ல் 10ம் வகுப்பு:தேர்வு முடிவு தேதி அறிவிப்பு


தமிழகம் மற்றும் புதுச்சேரியில், பிளஸ் 2 தேர்வு முடிவுகள், மே 7ம் தேதி; பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள், மே 21ம் தேதி ெவளியிடப்படும்' என, தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில், பிளஸ் 2 தேர்வு, மார்ச் 5ம் தேதி துவ
ங்கி, 31ம் தேதி முடிந்தது. 8.75 லட்சம் மாணவர்கள், தேர்வு எழுதினர்.விடைத் தாள்களை திருத்தும் பணி, மார்ச் 16ம் தேதிதுவங்கியது. நேற்று முன்தினம், பணி நிறைவு பெற்றது. மதிப்பெண் சரிபார்ப்பு, விடை திருத்தும் மையப் பட்டியல்படி, மதிப்பெண், 'சிடி' தயாரிப்பு, மதிப்பெண் பட்டியல்தயாரிப்பு ஆகிய பணிகள், தற்போது நடந்து வருகின்றன.

பத்தாம் வகுப்பு தேர்வு, மார்ச் 19ம் தேதி துவங்கி, ஏப்ரல் 10ம் தேதி நிறைவு பெற்றது. தமிழகம் முழுவதும், 3,298 மையங்களில், 10.72 லட்சம் பேர் தேர்வு எழுதினர்.'பிளஸ் 2 தேர்வு முடிவுகள், மே 7ம் தேதி வெளியாகும்' என, நான்கு நாட்களுக்கு முன், 'தினமலர்' நாளிதழில் செய்தி வெளியானது. அதை அரசு நேற்று உறுதி செய்து, தேர்வு முடிவு வெளியாகும் தேதியை, முறைப்படி அறிவித்தது.அதன்படி, பிளஸ் 2 தேர்வு முடிவுகள், மே 7ம் தேதி, காலை 10:00 மணிக்கும், 10ம் வகுப்பு தேர்வுகள், மே 21ம் தேதி, காலை 10:00 மணிக்கும் வெளியாகின்றன.

தேர்வு எழுதிய மாணவர்கள், தங்கள் பதிவெண், பிறந்த தேதி, மாதம், ஆண்டைப் பதிவு செய்து, தேர்வு முடிவுகளை, மதிப்பெண்களுடன், www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in, www.dge3.tn.nic.in, ஆகிய இணைய தளங்கள் மூலம் அறிந்து கொள்ளலாம்.
இது தவிர, ஒவ்வொரு மாவட்டத்திலும், கலெக்டர் அலுவலகங்களில் இயங்கும் தேசிய தகவல் மையங்களிலும், அனைத்து மைய மற்றும் கிளை நுாலகங்களிலும், கட்டணம் இல்லாமல், தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளிகளிலும், மதிப்பெண்களுடன் கூடிய, தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.

Popular posts from this blog

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

முன்னுதாரணமாக விளங்கும் வடமணப்பாக்கம் அரசு தொடக்கப் பள்ளி

எண்ம முறையில் பாடம் கற்றல், குழந்தைகள் நூல்கள் வாசித்தல், கணினிபயிற்சி பெறுதல், அறிவியல் ஆய்வகம் என பல சிறப்பு அம்சங்களுடன் சுகாதாரம், ஒழுக்கம் ஆகியவற்றுடன் சேர்ந்து கல்வி கற்பிக்கப்படுகிறது.