Skip to main content

மே 7ல் பிளஸ் 2; மே 21ல் 10ம் வகுப்பு:தேர்வு முடிவு தேதி அறிவிப்பு


தமிழகம் மற்றும் புதுச்சேரியில், பிளஸ் 2 தேர்வு முடிவுகள், மே 7ம் தேதி; பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள், மே 21ம் தேதி ெவளியிடப்படும்' என, தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில், பிளஸ் 2 தேர்வு, மார்ச் 5ம் தேதி துவ
ங்கி, 31ம் தேதி முடிந்தது. 8.75 லட்சம் மாணவர்கள், தேர்வு எழுதினர்.விடைத் தாள்களை திருத்தும் பணி, மார்ச் 16ம் தேதிதுவங்கியது. நேற்று முன்தினம், பணி நிறைவு பெற்றது. மதிப்பெண் சரிபார்ப்பு, விடை திருத்தும் மையப் பட்டியல்படி, மதிப்பெண், 'சிடி' தயாரிப்பு, மதிப்பெண் பட்டியல்தயாரிப்பு ஆகிய பணிகள், தற்போது நடந்து வருகின்றன.

பத்தாம் வகுப்பு தேர்வு, மார்ச் 19ம் தேதி துவங்கி, ஏப்ரல் 10ம் தேதி நிறைவு பெற்றது. தமிழகம் முழுவதும், 3,298 மையங்களில், 10.72 லட்சம் பேர் தேர்வு எழுதினர்.'பிளஸ் 2 தேர்வு முடிவுகள், மே 7ம் தேதி வெளியாகும்' என, நான்கு நாட்களுக்கு முன், 'தினமலர்' நாளிதழில் செய்தி வெளியானது. அதை அரசு நேற்று உறுதி செய்து, தேர்வு முடிவு வெளியாகும் தேதியை, முறைப்படி அறிவித்தது.அதன்படி, பிளஸ் 2 தேர்வு முடிவுகள், மே 7ம் தேதி, காலை 10:00 மணிக்கும், 10ம் வகுப்பு தேர்வுகள், மே 21ம் தேதி, காலை 10:00 மணிக்கும் வெளியாகின்றன.

தேர்வு எழுதிய மாணவர்கள், தங்கள் பதிவெண், பிறந்த தேதி, மாதம், ஆண்டைப் பதிவு செய்து, தேர்வு முடிவுகளை, மதிப்பெண்களுடன், www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in, www.dge3.tn.nic.in, ஆகிய இணைய தளங்கள் மூலம் அறிந்து கொள்ளலாம்.
இது தவிர, ஒவ்வொரு மாவட்டத்திலும், கலெக்டர் அலுவலகங்களில் இயங்கும் தேசிய தகவல் மையங்களிலும், அனைத்து மைய மற்றும் கிளை நுாலகங்களிலும், கட்டணம் இல்லாமல், தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளிகளிலும், மதிப்பெண்களுடன் கூடிய, தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு