Skip to main content

தமிழ்நாடு முழுவதும் மே 5–ந்தேதி முதல் பள்ளிகளில் ஆதார் முகாம் நடத்த திட்டம்

தமிழ்நாடு முழுவதும் மே 5–ந்தேதி முதல் 65 லட்சம் மாணவர்களுக்கு பள்ளிகளில் ஆதார் முகாம் நடத்த திட்டம்
தமிழ்நாடு முழுவதும் மே 5–ந்தேதி முதல் 65 லட்சம் மாணவர்களுக்கு பள்ளிகளில் ஆதார் முகாம் நடத்த திட்டம்தமிழ்நாட்டில் ஆதார் அட்டை இல்லாதவர்களுக்கும், விடுபட்டவர்களுக்கும் சிறப்பு முகாம்க
ள் மூலம் போட்டோ எடுத்து விவரங்கள் பதிவு செய்யப்பட்டு வருகிறது. ஆதார் அட்டை வழங்கும் பணி இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில் சென்னையில் 69 சதவீதம் பேர் மட்டுமே ஆதார் அட்டை பெற்றுள்ளனர்.
இதே போல் தமிழ்நாடு முழுவதும் 1.2 கோடி மாணவ–மாணவிகளில் 30 லட்சம் முதல் 40 லட்சம் மாணவர்களுக்கு மட்டுமே ஆதார் அட்டை வழங்கப்பட்டுள்ளது. இன்னும் 65 லட்சம் மாணவர்களுக்கு ஆதார் அட்டை வழங்கப்பட வேண்டியுள்ளது.
இவர்களுக்கு பள்ளிகளிலேயே ஆதார் சிறப்பு முகாம்கள் நடத்த பள்ளி கல்வித்துறை ஏற்பாடு செய்துள்ளது. இது தொடர்பாக பள்ளிகளில் சிறப்பு முகாம்கள் நடத்துமாறு வருவாய்த்துறையினரை பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.
இதைத் தொடர்ந்து வருகிற மே 5–ந்தேதிக்குப்பின் முகாம்கள் நடத்த வருவாய்த் துறையினர் முடிவு செய்துள்ளனர். முதலில் தர்மபுரி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் முகாம்கள் தொடங்கும். தொடர்ந்து தமிழ்நாட்டின் பிற மாவட்டங்களிலும், அதன் பிறகு சென்னை பள்ளிகளிலும் ஆதார் சிறப்பு முகாம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
மாணவர்களுக்கு தனியார் ஆதார் எண்கள் வழங்குவதன் மூலம் அது கல்வித்துறை நிர்வாக தகவல் மையத்துடன் இணைக்கப்பட வாய்ப்பாக இருக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு