Skip to main content

சாலை ஆய்வாளர் காலி பணியிடத்துக்கு விண்ணப்பிக்க ஏப். 30 கடைசி நாள்


சிவகங்கை மாவட்ட ஊரக வளர்ச்சி அலகில் ஊராட்சி ஒன்றியங்களில் காலியாக உள்ள 9 சாலை ஆய்வாளர் பணியிடங்களை மாவட்ட அளவிலான போட்டித் தேர்வின் மூலம் நிரப்ப விண்ணப்பங்கள் அனுப்புவதற்கு
கடைசி தேதி ஏப். 30 என மாவட்ட ஆட்சியர் து. முனுசாமி தெரிவித்துள்ளார்.
   அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:
     ஒன்பது சாலை ஆய்வாளர் காலி பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பவர்கள், ஐடிஐ  பட்டயப் படிப்பில் சிவில் டிராப்ட்ஸ்மேன் கல்வித் தகுதியுடன் 1.7.2012 அன்று 35 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.    இதற்கு கீழ்க்கண்ட வகுப்பைச் சார்ந்தவர்களிடமிருந்து உரிய ஆவணங்களுடன் ஏப். 30 க்குள் மாவட்ட ஆட்சியரக அலுவலக வளர்ச்சிப் பிரிவில்  விண்ணப்பங்கங்களை வழங்க வேண்டும்.     மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்யாதவர்களும், பதிவை புதுப்பிக்கத் தவறியவர்களும் விண்ணப்பிக்கலாம்.
 அனைத்து வகுப்பைச் சார்ந்த (பொது) முன்னுரிமையற்றவர், ஆதிதிராவிடர் (அருந்ததியர்) வகுப்பைச் சேர்ந்த பெண், மிகவும் பிற்பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்பைச் சேர்ந்த முன்னுரிமையற்றவர், பிற்பட்டோர் (முஸ்லிம் அல்லாதவர்கள்) வகுப்பைச் சேர்ந்த முன்னுரிமையற்றவர், அனைத்து வகுப்பைச் சேர்ந்த பெண்,  ஆதிதிராவிடர் வகுப்பைச் சேர்ந்த  முன்னுரிமையற்றவர், மிகவும் பிற்பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்பைச் சேர்ந்த பெண், பிற்பட்டோர் (முஸ்லிம் அல்லாதவர்கள்) வகுப்பைச் சேர்ந்த பெண் மற்றும் ஆதிதிராவிடர் வகுப்பைச் சேர்ந்த பெண் ஆகிய இனச்சுழற்சியில் தலா ஒரு பணியிடம் வீதம் நிரப்பப்பட உள்ளது என அவர் கூறியுள்ளார்.

Popular posts from this blog

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - செயல்முறைகள்

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - இயக்குனர் செயல்முறைகள்

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்