தஞ்சாவூர் மாவட்டம், திருக்காட்டுப்பள்ளி அரசு உயர்நிலைப் பள்ளியில் பெண் ஆசிரியைக்கு ஆபாச குறுந்தகவல் அனுப்பிய 3 ஆசிரியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
திருக்காட்டுப்பள்ளி அரசு உயர்நிலைப் பள்ளியில் 400 மாணவ, மா
ணவிகள் படித்து வருகின்றனர். 13 ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்தப் பள்ளியில் பணியாற்றும் திருமணமான பெண் ஆசிரியையிடம், இதே பள்ளியின் ஆசிரியர்கள் சுகுமார், கார்த்திக், பழனியய்யா ஆகிய 3 பேரும் செல்லிடப்பேசியில் பேசியுள்ளனர்.
தொடக்கத்தில் சாதாரணமாக பேசி வந்த அவர்கள், நாளுக்குநாள் ஆபாசமாகவும், அருவருக்கத்தக்க வகையிலும் பேசியுள்ளனர். மேலும், அவர்கள் மூவரும் ஆசிரியையின் செல்லிடப்பேசிக்கு ஆபாச குறுந்தகவல்களையும் அனுப்பியுள்ளனர்.
இதுகுறித்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரிடம் ஆசிரியை திங்கள்கிழமை புகார் அளித்தார். இதையடுத்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அதில் ஆசிரியையின் புகாரில் உண்மை இருப்பது தெரிய வந்தது. இது குறித்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்து தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, ஆசிரியர்கள் சுகுமார், கார்த்திக், பழனியய்யா ஆகிய மூவரும் திங்கள்கிழமை இரவு பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். இவர்கள் மூவரும் திருமணமானவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.