Skip to main content

ஆசிரியைக்கு ஆபாச எஸ்எம்எஸ்: 3 பட்டதாரி ஆசிரியர்கள் சஸ்பெண்ட்


தஞ்சாவூர் மாவட்டம், திருக்காட்டுப்பள்ளி அரசு உயர்நிலைப் பள்ளியில் பெண் ஆசிரியைக்கு ஆபாச குறுந்தகவல் அனுப்பிய 3 ஆசிரியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
திருக்காட்டுப்பள்ளி அரசு உயர்நிலைப் பள்ளியில் 400 மாணவ, மா
ணவிகள் படித்து வருகின்றனர். 13 ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்தப் பள்ளியில் பணியாற்றும் திருமணமான பெண் ஆசிரியையிடம், இதே பள்ளியின் ஆசிரியர்கள் சுகுமார், கார்த்திக், பழனியய்யா ஆகிய 3 பேரும் செல்லிடப்பேசியில் பேசியுள்ளனர்.
தொடக்கத்தில் சாதாரணமாக பேசி வந்த அவர்கள், நாளுக்குநாள் ஆபாசமாகவும், அருவருக்கத்தக்க வகையிலும் பேசியுள்ளனர். மேலும், அவர்கள் மூவரும் ஆசிரியையின் செல்லிடப்பேசிக்கு ஆபாச குறுந்தகவல்களையும் அனுப்பியுள்ளனர்.
இதுகுறித்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரிடம் ஆசிரியை திங்கள்கிழமை புகார் அளித்தார். இதையடுத்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அதில் ஆசிரியையின் புகாரில் உண்மை இருப்பது தெரிய வந்தது. இது குறித்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்து தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, ஆசிரியர்கள் சுகுமார், கார்த்திக், பழனியய்யா ஆகிய மூவரும் திங்கள்கிழமை இரவு பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். இவர்கள் மூவரும் திருமணமானவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Popular posts from this blog

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

முன்னுதாரணமாக விளங்கும் வடமணப்பாக்கம் அரசு தொடக்கப் பள்ளி

எண்ம முறையில் பாடம் கற்றல், குழந்தைகள் நூல்கள் வாசித்தல், கணினிபயிற்சி பெறுதல், அறிவியல் ஆய்வகம் என பல சிறப்பு அம்சங்களுடன் சுகாதாரம், ஒழுக்கம் ஆகியவற்றுடன் சேர்ந்து கல்வி கற்பிக்கப்படுகிறது.