Skip to main content

ஆசிரியைக்கு ஆபாச எஸ்எம்எஸ்: 3 பட்டதாரி ஆசிரியர்கள் சஸ்பெண்ட்


தஞ்சாவூர் மாவட்டம், திருக்காட்டுப்பள்ளி அரசு உயர்நிலைப் பள்ளியில் பெண் ஆசிரியைக்கு ஆபாச குறுந்தகவல் அனுப்பிய 3 ஆசிரியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
திருக்காட்டுப்பள்ளி அரசு உயர்நிலைப் பள்ளியில் 400 மாணவ, மா
ணவிகள் படித்து வருகின்றனர். 13 ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்தப் பள்ளியில் பணியாற்றும் திருமணமான பெண் ஆசிரியையிடம், இதே பள்ளியின் ஆசிரியர்கள் சுகுமார், கார்த்திக், பழனியய்யா ஆகிய 3 பேரும் செல்லிடப்பேசியில் பேசியுள்ளனர்.
தொடக்கத்தில் சாதாரணமாக பேசி வந்த அவர்கள், நாளுக்குநாள் ஆபாசமாகவும், அருவருக்கத்தக்க வகையிலும் பேசியுள்ளனர். மேலும், அவர்கள் மூவரும் ஆசிரியையின் செல்லிடப்பேசிக்கு ஆபாச குறுந்தகவல்களையும் அனுப்பியுள்ளனர்.
இதுகுறித்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரிடம் ஆசிரியை திங்கள்கிழமை புகார் அளித்தார். இதையடுத்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அதில் ஆசிரியையின் புகாரில் உண்மை இருப்பது தெரிய வந்தது. இது குறித்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்து தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, ஆசிரியர்கள் சுகுமார், கார்த்திக், பழனியய்யா ஆகிய மூவரும் திங்கள்கிழமை இரவு பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். இவர்கள் மூவரும் திருமணமானவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்