Skip to main content

பிளஸ் 2 உயிரியல் தேர்வு: கருணை மதிப்பெண் இல்லை

பிளஸ் 2 தேர்வுகளிலேயே மிகக் கடினமான உயிரியல் பாடத் தேர்வுக்கு கருணை மதிப்பெண் வழங்கத் தேவையில்லை என நிபுணர் குழு பரிந்துரைத்துள்ளது. இந்தப் பரிந்துரையை அரசுத் தேர்வுகள் இயக்ககமும் ஏற்றுக் கொண்டுள்ளதாகத் தெரிகிறது.
பிளஸ் 2 உயிரியல் பாடத் தேர்வில் விலங்கியல் பிரிவு மிக
க் கடினமாக இருந்தது. பொதுத்தேர்வுகளில் இதுவரை கேட்கப்படாத கேள்விகள் இடம் பெற்றிருந்ததோடு, போட்டித் தேர்வு அளவுக்கு வினாக்கள் கடினமாக இருந்ததாக ஆசிரியர்கள் தெரிவித்திருந்தனர்.
இந்த நிலையில், உயிரியல் பாடத்தில் விலங்கியல் பிரிவில் கேட்கப்பட்ட கேள்விகள் அனைத்தும் பாடப்புத்தகத்தில் இருந்தே கேட்கப்பட்டுள்ளன. வினாக்களில் எந்தப் பிழைகளும் இல்லை என்பதால் கருணை மதிப்பெண் வழங்கத் தேவையில்லை என முடிவு செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
உயிரியல் பாடத்தில் தேர்ச்சி பெற விலங்கியல், தாவரவியல் பிரிவுகளையும் சேர்த்து 30 மதிப்பெண்கள் எடுத்தாலே போதுமானது. செய்முறைத் தேர்வில் தேர்ச்சி பெற 40 மதிப்பெண்கள் பெற வேண்டும் என்பதால் பிளஸ் 2 மாணவர்கள் தேர்ச்சி பெறுவதில் சிக்கல் இருக்காது என அதிகாரிகள் தெரிவித்தனர்.
விலங்கியல் பிரிவில் கேட்கப்பட்ட கேள்விகளும் தரமானவைதான். ஆனால், எம்.பி.பி.எஸ். அல்லது டி.என்.பி.எஸ்.சி. தேர்வுகளைப் போன்று, தசைச் சிதைவு நோய்க்கான காரணங்கள், நாடித் துடிப்பு குறைவதற்கான காரணங்கள் போன்ற கடினமான கேள்விகள் இதில் இடம்பெற்றிருந்தன. புத்தகம் முழுவதும் படித்த மாணவர்கள் கூட விலங்கியல் பிரிவில் 75-க்கு 50 அல்லது 60 மதிப்பெண் மட்டுமே பெற முடியும் என்று ஆசிரியர்கள் தெரிவித்தனர்.
விலங்கியல் பிரிவில் மாணவர்களைத் தேர்ச்சி பெற வைப்பதற்காக பள்ளிக் கல்வித் துறை சார்பில் மாதிரி வினாப் புத்தகங்கள் அச்சிட்டு வழங்கப்பட்டன. ஆனால், இந்த வினாத்தாள்களிலிருந்து 5 மதிப்பெண் அளவுக்கே கேள்விகள் பொதுத்தேர்வில் வந்துள்ளன. எனவே, விடைத்தாள் திருத்துவதில் சற்றுத் தாராளமாக இருக்க வேண்டும் எனவும் அவர்கள் கோரினர்.
உயிரியல் பாடத்தில் விலங்கியல் பிரிவு கடினமாக இருந்தாலும், தாவரவியல் பகுதி வினாக்கள் எளிமையாக இருந்தன.

Popular posts from this blog

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

முன்னுதாரணமாக விளங்கும் வடமணப்பாக்கம் அரசு தொடக்கப் பள்ளி

எண்ம முறையில் பாடம் கற்றல், குழந்தைகள் நூல்கள் வாசித்தல், கணினிபயிற்சி பெறுதல், அறிவியல் ஆய்வகம் என பல சிறப்பு அம்சங்களுடன் சுகாதாரம், ஒழுக்கம் ஆகியவற்றுடன் சேர்ந்து கல்வி கற்பிக்கப்படுகிறது.