Skip to main content

பிளஸ் 2 மாணவர்களுக்கு இலவச திறனறித் தேர்வு: லிம்ரா நிறுவனம் நடத்துகிறது

மருத்துவப் படிப்பு படிப்பதற்கான கல்வித் திறன் தங்களிடம் உள்ளதா என்பதை பிளஸ் டூ படிக்கும் மாணவ, மாணவிகள் தெரிந்துகொள்ள உதவும் வகையில் இலவச திறனறித் தேர்வு மே 3-ம் தேதி நடக்கவுள்ளது.
இத்தேர்வை நடத்தும் லிம்ரா ஓவர்சீஸ் எஜுகேஷனல் கன்சல்டன்ட்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது:

தங்கள் பிள்ளைகளை எம்.பி.பி.எஸ். படிக்க வைக்க பெற்றோர்களுக்கும், டாக்டராகும் அசை மாணவர்களுக்கும் உள்ளது. ஆனால், அவ
ர்களிடம் அதற்கான கல்வித் திறன் இருக்கிறதா என்பதை அறிந்துகொள்ள உதவுவதற்காக இலவச திறனறித் தேர்வு நடக்கவுள்ளது.2015 ஆம் ஆண்டில், பிளஸ் 2 தேர்வு எழுதிய அனைத்து மாணவர்களும் இந்த தேர்வை எழுதலாம்.சென்னையில் 6 மையங்களிலும், மதுரை, கோயம்புத்தூர், திருச்சி, சேலம், திருநெல்வேலி, வேலூர், காரைக்குடி, நாகர் கோவில், கும்பகோணம் மற்றும் புதுச்சேரியில் தலா ஒரு மையத்திலும் இத்தேர்வு நடத்தப்படும்.

விருது, பரிசு

தேர்வில் கலந்துகொள்ளும் அனைவருக்கும், சென்னை பாரத் பல்கலைக்கழகமும் லிம்ரா நிறுவனமும் இணைந்து சான்றிதழை வழங்கும்.

தமிழக அளவில் முதல் மதிப்பெண் பெற்ற 10 பேருக்கு, சென்னையில் நடக்கும் விழா ஒன்றில் விருதுகளும், பரிசுகளும் வழங்கப்படும்.www.limratalenttest.com என்ற இணையதள முகவரியில் விண்ணப்பத்தை டவுண்லோட் செய்தோ, ஆன்-லைன் மூலமோ விண்ணப்பிக்கலாம். 

மேலும்விவரங்களுக்கு 9444614353,9444615363, 9445783333 மற்றும் 9445483333 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்புகொள்ளலாம்.

இவ்வாறு செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு