Skip to main content

டான்செட்' விண்ணப்பிக்க ஏப்.25, வரை கால நீட்டிப்பு


'டான்செட்' தேர்வுக்கு விண்ணப்பிக்க வரும், 25 ம் தேதி வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ள நிலையில், மாணவர்கள் உடனுக்குடன், 'ஹால்டிக்கெட்' பெற்றுச்செல்ல அரசு தொழில்நுட்பக் கல்லுாரியில் பிரத்யேக ஏற்
பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

முதுகலை இன்ஜி., எம்.டெக்., எம்.ஆர்க்., எம்.பி.ஏ., எம்.சி.ஏ., ஆகிய படிப்புகளுக்கு, பொது நுழைவுத் தேர்வான 'டான்செட்' கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இவ்வாண்டு மே, ௧௬, ௧௭ம் தேதிகளில் 'டான்செட்' தேர்வு நடக்கிறது.இதற்கான விண்ணப்பங்கள், தடாகம் ரோட்டிலுள்ள அரசு தொழில்நுட்பக் கல்லுாரியில், கடந்த, ௧ம் தேதி முதல் காலை, ௯:௩௦ மணி முதல் மாலை, ௫:௩௦ மணி வரை வழங்கப்பட்டு வருகிறது.

வரும், ௨0 ம் தேதி வரை விண்ணப்பங்கள் வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், மாணவர்களின் நலன்கருதி வரும், ௨5ம் தேதி வரை காலநீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. விண்ணப்ப கட்டணமாக, பொதுப் பிரிவினர், ௫௦௦ ரூபாயும், எஸ்.சி., எஸ்.டி., பிரிவினர், ௧௦, பிளஸ் ௨ மதிப்பெண் சான்றிதழ் மற்றும் சாதி சான்றிதழ் நகலுடன், ௨௫௦ ரூபாய் செலுத்தி விண்ணப்பங்கள் பெற்றுக்கொள்ளலாம்.


மேலும், www.annauniv.edu/tancet2015 எனும் இணையதளத்தில், 'ஆன் லைன்' மூலமும் இவ்வாண்டு விண்ணப்பிக்கலாம் என, அண்ணா பல்கலை அறிவித்துள்ளது; ஞாயிற்றுக்கிழமைகளில் விண்ணப்பங்கள் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

'டான்செட்' விண்ணப்ப வினியோக பொறுப்பாளர் பேராசிரியர் குமார் கூறுகையில்,''டான்செட் தேர்வுக்கு விண்ணப்பிக்க வரும், 25ம் தேதி வரை கூடுதல் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. மாணவர்கள் விண்ணப்பத்தை பூர்த்திசெய்து வழங்கியவுடன், உடனுக்குடன் சரிபார்க்கப்பட்டு புகைப்படத்துடன்கூடிய ஹால்டிக்கெட் பெற்றுச்செல்லலாம். 'ஆன் லைன்' முறையில் விண்ணப்பிப்பவர்களுக்கு, பல்கலையிலிருந்து ஹால்டிக்கெட் அனுப்பிவைக்கப்படும்,'' என்றார்.

Popular posts from this blog

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

கணக்கெடுப்பு ! : பள்ளி செல்லா மாணவர்கள்...: ஏப்., 7ம் தேதி முதல் துவக்கம்

கடலூர் மாவட்டத்தில், அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு இடைநின்ற மாணவ, மாணவிகள் குறித்த விவரங்கள் கணக்கெடுக்கும் பணி வரும் 7ம் தேதி, துவங்குகிறது. தமிழகத்தில், ஆண்டுதோறும் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், 6 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு

10ம் வகுப்பு கணிதத்தேர்வில் போனஸ் மதிப்பெண்

பத்தாம் வகுப்பு தேர்விற்கான விடைத்தாள்கள் திருத்தும் பணி நடக்கிறது. பத்தாம் வகுப்பு கணிதத்தேர்வில், 'ஏ' பிரிவு ஒரு மதிப்பெண் வினாவிற்கான 15 வது கேள்வியில் ஆங்கில வழி வினா தவறாக கேட்கப்பட்டுள்ளதா