Skip to main content

டான்செட்' விண்ணப்பிக்க ஏப்.25, வரை கால நீட்டிப்பு


'டான்செட்' தேர்வுக்கு விண்ணப்பிக்க வரும், 25 ம் தேதி வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ள நிலையில், மாணவர்கள் உடனுக்குடன், 'ஹால்டிக்கெட்' பெற்றுச்செல்ல அரசு தொழில்நுட்பக் கல்லுாரியில் பிரத்யேக ஏற்
பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

முதுகலை இன்ஜி., எம்.டெக்., எம்.ஆர்க்., எம்.பி.ஏ., எம்.சி.ஏ., ஆகிய படிப்புகளுக்கு, பொது நுழைவுத் தேர்வான 'டான்செட்' கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இவ்வாண்டு மே, ௧௬, ௧௭ம் தேதிகளில் 'டான்செட்' தேர்வு நடக்கிறது.இதற்கான விண்ணப்பங்கள், தடாகம் ரோட்டிலுள்ள அரசு தொழில்நுட்பக் கல்லுாரியில், கடந்த, ௧ம் தேதி முதல் காலை, ௯:௩௦ மணி முதல் மாலை, ௫:௩௦ மணி வரை வழங்கப்பட்டு வருகிறது.

வரும், ௨0 ம் தேதி வரை விண்ணப்பங்கள் வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், மாணவர்களின் நலன்கருதி வரும், ௨5ம் தேதி வரை காலநீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. விண்ணப்ப கட்டணமாக, பொதுப் பிரிவினர், ௫௦௦ ரூபாயும், எஸ்.சி., எஸ்.டி., பிரிவினர், ௧௦, பிளஸ் ௨ மதிப்பெண் சான்றிதழ் மற்றும் சாதி சான்றிதழ் நகலுடன், ௨௫௦ ரூபாய் செலுத்தி விண்ணப்பங்கள் பெற்றுக்கொள்ளலாம்.


மேலும், www.annauniv.edu/tancet2015 எனும் இணையதளத்தில், 'ஆன் லைன்' மூலமும் இவ்வாண்டு விண்ணப்பிக்கலாம் என, அண்ணா பல்கலை அறிவித்துள்ளது; ஞாயிற்றுக்கிழமைகளில் விண்ணப்பங்கள் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

'டான்செட்' விண்ணப்ப வினியோக பொறுப்பாளர் பேராசிரியர் குமார் கூறுகையில்,''டான்செட் தேர்வுக்கு விண்ணப்பிக்க வரும், 25ம் தேதி வரை கூடுதல் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. மாணவர்கள் விண்ணப்பத்தை பூர்த்திசெய்து வழங்கியவுடன், உடனுக்குடன் சரிபார்க்கப்பட்டு புகைப்படத்துடன்கூடிய ஹால்டிக்கெட் பெற்றுச்செல்லலாம். 'ஆன் லைன்' முறையில் விண்ணப்பிப்பவர்களுக்கு, பல்கலையிலிருந்து ஹால்டிக்கெட் அனுப்பிவைக்கப்படும்,'' என்றார்.

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு